1. என் மகிழ்வறத்தை உன் சிரிப்பால் மீட்டிடு! {ஒரு காதலனின் இலகு மொழிச் சங்கீதக் கவிதை]
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் இன்னும் கொலுவிருக்கும் காதலி.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
உன் சிரிக்கும் சித்திரத்தைக் காண்கையில்
என் உளத்தில் வாழ்வின் ஊக்கம் கூடுதே.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
உனை நான் மறவேன். உனை நான் துறவேன்.
உனை நான் துறவேன். உனை நான் மறவேன்.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
நான் உன்னுடன் சேருமட்டும் சிரித்து உன்
தங்கம் போன்ற திருமுகத்தைக் காட்டிடு.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
நாங்கள் மீண்டும் கூடுமட்டும் சிரித்து நீ
ஆனமட்டும் எனது வாழ்வை ஊக்கிடு.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
உன் சிரித்த சித்திரத்தால் என்றுமே
என் உளத்தில் மகிழ்வறத்தை மீட்டிடு.
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி!
என்னுள் என்றும் கொலுவிருக்கும்
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!!
கவிதை 2: அகதிஆகிய தமிழர்: அடுத்த அடி!
அகதி ஆகிய தமிழரிற் பலர்
அகிலம் எங்கும் சிறகு அடித்தார்.
பறந்து சென்றும் பரந்து நின்றும்
பற்பல வழிகளில் பாடுபட்டார்.
அகதி ஆகிய தமிழரிற் பலர்
ஈழதேசத்தில் தங்கி நின்று
வெறுப்பினுள் வாழ்ந்தும், வெகுளாது
வெல்லும் வழிகளை ஆராய்ந்தார்.
அகதி ஆகிய தமிழர் பெரிதாய்
அடங்கி ஒடுங்கி முடங்கவில்லை.
இனம் சாகவில்லை. இளைக்கவில்லை.
அடிமைகளும் ஆகவில்லை.
அகதி ஆகிய தமிழரிற் பலர்
அகிலம் எங்கும் பறந்து சென்றார்.
அமெரிக்காவில், வெளியிருந்து இயங்க
நிழல்-அரசு ஒன்றினைப் பிரசவித்தார்.
ஐநாவுக்குள் ஒழித்துப் புகுந்தும்
தமிழ் ஆதங்கம் அடித்து உரைத்தார்.
கேலிச் சித்திர நவீன வழியில்
கொடுங்கோலரை நடுங்க வைத்தார்.
பொப்-ரகப் பாட்டால் பறை அடித்து
வசை மழையினை மாரி பொழிந்தார்.
இங்கிலாந்து, கனடாவில், ஊடகங்களால்
தம் அநீதியை உலகிற்கு அறிவித்தார்.
சங்கம்-கூட்டிச் சம்மேளனங்களில்
உரிமைகள் வெல்லும் வழி ஆய்ந்தார்.
ஆலயங்கள் ஏற்படுத்தி, அகதிகளை அணைத்து
அவரின் ஆத்ம-பலத்தை அதிகரித்தார்.
பங்குநேரப் பள்ளிகள் நிறுவிச்
செந்தமிழ் அறிவைப் பெருக வைத்தார்.
நூல்கள் வெளியிட்டு நுண்ணறிவினால்
இலக்கியம் காக்க வழி வகுத்தார்.
புதினப் பத்திரிகைகள், ஒலி-ஒளி ஊடகச்
சேவைகள் பலவைச் செவ்வனே செய்தார்.
அவர்களைப் போலவே, அவுஸ்திரேலியா,
பிறான்சு, யேர்மனி, டென்மார்க், சுவீடன்
நோர்வே, சுவிஸ் போன்ற நல் நாடுகளின்
அகதித் தமிழரின் பகுதிப் பல பங்கும்...
ஆண்டுகளாய் அளித்து ஆழமாய் வேரோடி
வளர்ந்து விளைந்த விருட்சங்கள் ஆகும்.
தாயகம் தங்கிய அகதிகள் தொண்டுகள்
அடிப்படை முறையில் அளப்பரியனவாம்.
காயங்கள் தாங்கிக் கனத்த இடர்களிடை
களைக்காது இளைக்காது அன்னார் அங்கு
மாயத்தால் வாழ்ந்து உபாயத்தால் வழிவகுத்து
உசிதமாய் உரிமைப்போர் நடத்தி உள்ளார்!
சொல்லி முடிந்தவை, அகதித் தமிழரின்
கூட்டுத் தொண்டுகள், சேவைகள் ஆகும்.
சொல்வதற்குப் பல உண்டு, தனித்துச் செய்த
திறமைகொள் அகதிகள் சாதனை நிரல்கள்:
தொலைபேசும் துறையில் உலகில் பெயர்-பதித்தார்
தன்திறனால், தமிழ் அகதி நல்லார் ஒருவர்.
விலையான பங்குச் சந்தை வியாபாரத்தில்
பணம் குவித்தார், வேறொரு அகதித் தமிழர்.
கலைகளிலும் கல்வியிலும் உலகில் மினுங்குகிறார்
ஆயிரமாயிரம் தனித் தமிழ் இளைஞர்.
நிலைபெற்ற நவீன ஈமெயில் தொடர்பைத்
தொடக்கியதும் தமிழ் அகதியாம் ஒருவர்.
பல்கலைக் கழகம் பலவற்றில் பெரும்பெரும்
ஆசிரியப் பணியிலும் பற்பல தமிழர்.
நல்லறிவைப் பரப்புதற்குத் தனிநூல்கள் எழுதி
நோற்கின்றார் பல்நூறு அகதித் தமிழர்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும்
பாதையிற் சென்ற பல தனித் தமிழர்
எதிர்த்த தடைகளை உடைத்துச் சென்று
புதுப்புதுப் பாதையில் புதிய நாடுகளில்
எந்த வேலையும் எளியதெனாது எடுத்து
அந்தந்த நாட்டுக்கு அயராது உழைத்துப்
பந்தங்களுக்குப் பிரயாணப் பணமும் அனுப்பி
முந்தி வந்தோர் எஞ்சியரை எவ்வாறோ இழுத்து
பலசரக்குக்கும் பெற்றோலும் பகலிரவாய் விற்று
நித்திரை இன்றி நீள்நேரம் உழைத்துக்
கடுங்குளிர், இருள், கறுப்பு-நிறப்-பேதம்...
மொழிப் பிரச்சினையையும் பிரயாசையால் வென்று
கரிசனையாய் உள்நாட்டார் உள்ளங்கள் கவர்ந்து
பரந்து பல சமூகத் தளங்களிற் புகுந்து
அரசியலார், ஆசிரியர், எந்திரிகர், வைத்தியர்கள்,
வியாபாரத் தொழிலாளர், சட்டத்தரணிகள்,
கணக்காளர், உணவகத்தார், உதவியர், விநியோகர்,
குப்பை-கூட்டிஎறிவோர், கோப்பை-கழுவித்துடைப்போர்,
இவ்வாறு பல்மட்டத் தொழில்கள் பார்க்கின்றார்...
இவ்வுலகு அடங்கலும் ஈழ அகதித் தமிழர்.
இருக்கும் எம் அகதி-நிலை இன்று இதுவானால்
அடுத்து நாம் மேலும் ஆழ்ந்து தூரமும் நோக்கி...
வருங்காலம் எவ்வாறு சென்றால் எல்லார்க்கும்
நன்றென்று சிந்தித்து முன்செல்வோம் வாரீர்!
விலங்குகள்தான் வேறுவேறு மனித இனத்தோர்
என்றே எம் விஞ்ஞான அறிஞர் சொல்கிறார்.
விலக்கானவர் அல்லர், இலங்கையின் நான்கு
இனத்தாரும் என்பதும் அதிலே அடங்கும்.
சிறுபான்மைத் தமிழர், மூவினத்தின் நாம்கூட,
வேறு வேறு விலங்கினங்கள் ஆவோம் அல்லவா?
கடைசியில் மூவினமும் கூடித் தனி நாடு
அடைந்து வாழ்ந்தாலும் ஒரேஇனம் ஆவோமா?
ஒரேமொழியைப் பேசிடினும் மதமும், இயல்பும்
வரலாற்றாலும் வேறுபட்டோர் நாமெல்லோ?
ஒரேமொழிபேசி அம்மொழியில் தினமும்
அரசியலில் அடிபடும் தமிழ்நாட்டைப் பாரீர்!
இலங்கையின் பெரும்பான்மைச் சக-இனத்தோரும்
நூதனப் பயம் ஒன்று கொண்டோரே கண்டீர்!
பலவழியில் தமிழ்பேசும் மக்களை மெச்சி
மனதில் உயர்த்துவதால், பயமும் உள்-உறைந்தோர்.
பக்கத்திருந்து பளிச்சிடும் எம் பழம்பெரும்
தமிழ்நாடும் மாபெரும் பூதமாம் அவர்க்கு.
எக்காலமும் அக் கற்பனைப் பிரிவுப் பயம்
நிறைவேறும் சாத்தியம் இல்லவே இல்லை.
ஏன் எனும் விளக்கத்தை வரி இரண்டில் மேலே,
நல்ல முறையில் நான் சொல்லியே உள்ளேன்.
எனினும் தீங்கில்லாப் பல்வகைப் பாம்புகள்
போன்றவைக்கும் மனிதர் அஞ்சுதல் போலே...
சனிதோசச் சந்தேகமும் போலவே... அப் பயம்
தமக்கு உண்டேஎன்று அவரே சொல்லியுள்ளார்.
எனவேதான் ஐம்பதுகள் ஒருமொழித் திணிப்பும்,
ஓர வஞ்சனையும், இன ஒதுக்கலுமாம்.
எனவேயே எம் இளைஞரின் 30-ஆண்டு
ஆயுதப் போரும், அழிவுகளும், மௌனமுமாம்.
சந்ததி ஒன்று சண்டையில் சங்கமம் ஆயிற்று.
வெந்தன தீயில், எம் சுபீட்சமும், சாந்தியும்.
நடந்துவந்த பாதை சரி. நாளையின் வழி எது?
இனி நாம் இலங்கையில் இவ்வாண்டு பிறந்து
விடிந்துள்ள புரட்சியின் வழியினிலே சென்று
மனம்மாறி இன்றுள்ள நேச இணக்கமுள்ள
தேசீயப் புரட்சி-வழிப் புதுமை அரசுடன்...
இனவழியில் ஒற்றுமையும் உரிமைகளும் பேசி
இணங்கும் சாத்தியம் திடமாய்த் தோன்றுது..
நாமும் எம் சமூகத்தின் சாதிப் பிரிவினையும்,
சீதனத்தின் சீர்கேடும் என்றோ துறந்து விட்டோம்.
ஆண்-பெண் சமத்துவத்தை எம்ஆழ்ந்த, நீண்ட
அனுபவத்தால் நினைவாக்கி ஏற்றும் விட்டோம்.
இராச தந்திரங்களை அரசியல் துறைதனில்
அனுபவத்தால் அண்மையிலே கற்றும் விட்டோம்.
இவ்வாறு எம் பழைய சில, பாரதூரக் குறைகள்
எம்மிடம் இன்று இல்லாது ஒழிந்திட்ட படியால்,
தமிழர்க்கு ஆண்டவனால் கிடைத்த எதிர்க்கட்சித்
தலைமையையும் உசிதமாய்ப் பாவனை செய்து
தமிழினம் மூன்றும் தன்மையாய்த் தர்க்கித்து
எம் உரிமைகளை உசிதமாய் இணங்கலாம் என்பேன்!
சிங்களச் சோதரர்க்கும் புத்தி-மதிகள்
இங்கு சில நாம் சொல்லவே வேண்டும்.
தமிழ்பேசும் இனத்தாரை இனிமேல் உம்சோதரராய்
தயக்கங்கள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்ளுவீர்!
சமத்துவமாய் நடத்தினால் அவர்களும் உம்முடன்
சமத்துவமாய்ச் சேர்ந்து தம் தோள்களை இணைத்து
உமது சிங்களத் தீவை, தம் தமிழின் ஈழத்தைத்
தமதும் எனப் பேணிப் பரிவுடனே சீர் செய்து
அக்காலக் கலாநிதி ஆனந்த குமாரர் போல்...
அருணாச்சலம், இராமநாதன் சான்றோரைப் போல்...
எக்காலமும் உமது கலாச்சார, இன-வழி
மேன்மைக்குத் தமிழரும் உதவிடுவார் காண்பீர்!
சிறிலங்கா, இலங்கை, சிங்களத்-தீவு, ஈழம்...
வெறிகொண்டு எவரும் எப்பெயரில் அழைத்தாலும்
இன்று வசிக்கின்ற எல்லார்க்கும் இது சொந்தம்.
நன்றே நாம் நாலினத்து, நால்-மதத்தாரும் சேர்ந்து
ஒற்றுமையாய் உழைத்து ஒற்றுமையாய்ப் பேணி
சற்றும் இனிப் பிணங்காமல் சமாதானமாய் வாழ்வோம்!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems