இர.மணிமேகலை (பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி.,கோயம்புத்தூர்.) கவிதைகள் இரண்டு!
1. பூலோக வாசிகள்
வானளாவி நிற்கும் கட்டிடக்கூரைகள்
பிரபஞ்சவெளிக்குச் செய்தியனுப்புகின்றன
தார்ச்சாலைகளில் பாய்ந்துசெல்லும் மகிழ்வுந்துகளில்
உறுமும் புலிகள் பயணிக்கின்றனவாம்
பலதரப்பட்ட மலைப்பாம்புகள் அவற்றைச்சாகசத்துடன்
ஓட்டுகின்றன என்பதும் குறிப்பு
கவனிக்க...
பயணத்தின்போது சில இடங்களில்
நாசுக்கும் அழகும் மிளிரும் மான்தென்படும்
பாம்பு அதனிடம்
கண்சிமிட்டிக் கரம் குலுக்கி நகரும்..
ஒதுக்கப்பட்ட தவளைகளைக்கண்டால்
பாம்புக்குக் கொண்டாட்டம்
வயிற்றை நிரப்பிக்கொள்ளும்
விழுங்கும் சிங்க ராஜாக்களைக்கண்டால்
கீழ்நோக்கிய பார்வையுடன் பாதம் பணியும்
அதன் பாசாங்கில் ஏமாந்த சிங்கம் மந்தகாசம் புரியும்
வெள்ளந்தி முயல்களைக்கண்டால்
மலையனுக்கு அறவே பிடிக்காது
விஷம் உமிழும்
கழுத்தை நெறிக்க மலையத்துவசன் மகள் இல்லாத்தால்
விஷத்தில் மாளும் முயலின் குருதியும்
பாம்பைப்பெருகச்செய்யும்
ஏகபோக ராஜாக்களும் அசுரப்புலிகளும் உள்ளவரை
அரவுகளின் பயணம் இனிதே தொடரும்
மீண்டும் ஒரு முறை
புசித்துவிடலாம் அறிவுக்கனியை
கிடைத்துவிடலாம் ஒருவேளை
மேடுபள்ளங்களற்ற உலகமும்
சாத்தான்களற்ற ஓவியமும்.
2. பாவைகள்
குளிரூட்டப்பட்ட அறையின் ஒளிக்கு
நிலவின் கதிர்கள் தோற்றிருந்தன
நாற்காலிகள் நிறைந்திருந்த வேளை
மேடையைத் தனதாக்கியிருந்தாள்
குரல் அதிகாரத்தொனி கொண்டிருந்தது
சந்தனக்குறியீடுகளில் வெண்ணிற நெற்றி
ஒளி மங்கியிருந்தது
முழவு முழங்க அவள் பாடத்துவங்கினாள்
மந்திர உச்சாடனம் உச்சத்தையடைந்தது
நாற்காலிக்கூட்டம் எதிரொலித்தது
அசைய மறுத்த இதழ்களும் விரிந்தன
அவனைக்குறித்த அலறலில் திகைத்திருந்தேன்
இன்னும் எத்தனை விரதைகள்
நெருப்புத்தேவன் அணைத்துக்கொள்ள
நாற்காலிகள் நிறைந்திருந்தன
மந்திர ஒலியைமீறி இதயத்தில்
சலங்கை ஒலி அதிர்ந்தது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
தேவனிடம் ஒரு வேண்டுகோள்!
- முல்லைஅமுதன் -
குற்றுயிராய்
இருக்கும் என்னிடம்
வந்து ஆசிர்வதிக்கிறாய்.
எழுந்துகொள்ளவே
முயற்சிக்கிறேன்..
சிறகுகள் அரியப்பட்டுள்ளன.
முக்கி முனகி
எழுகையில் தெரிகிறது
கால்கள்
முடமாக்கப்பட்டுள்ளன...
ஒருகையால்
ஆசிர்வதிக்கும்
தேவனே
உன்
மறுகையில்
மறைத்தபடி
என் உடல் சிதைத்த
வாள் குருதியுடன்...முதலில்
வாளைக் கொடு...
உன்னைச் சாய்க்கவேன்டும்
அல்லது
என்னை நானே
கொன்றுவிடவேண்டும்..
தேவர்களேயாயினும்
தலை குனிந்த
ஆசிர்வாதம்
பெற்றுக்கொள்ள
மனது
என்னிடம் தரப்படவில்லை...
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
முகநூல்- துவாரகா சாமிநாதன் -
எனது வன்மங்களை
பிரதியிடும் போது
சில
விளம்பர படுத்தல்களும் நிகழ்ந்து விடுகினறன.
ஒவ்வொரு முகஙகளிலும் தேடுகிறேன்
நல்லவைகள் ஒட்டியிருக்கின்றனவாயென
வலைத்தளங்களின் வலைகளில்
இண்டு இடுக்கெல்லாம் ஒடுகிறது
எனது எலி மனம்
சில வேளைகளில் அங்கே கொட்டப்படும்
வன்மங்களின் குப்பைகளில்
விசாரிப்புகளில்
விமர்சனங்களில்
புதைந்து சிதைந்தும் விடுகிறேன்
மனச்சிக்களின் காரணமாக அதன் நடுப்பக்கத்தில்
செருகப்பட்டுவிடுகிறேன்
சில சொடுக்குகளில் விபரீதம் நடத்துகிறேன்
சில இடுகைகளில் உற்சாகமடைகிறேன்
கருப்பு, சிகப்பு, வெள்ளை மஞ்சள்
நீலமென நிரம்பி வழிகிறது
என் முகமெங்கும்
எல்லோருடைய மனங்களில் எழும்
வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளும்
தொட்டியாய் இந்த முக நூல்.........
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
இயக்குநர் பாலுமகேந்திரா நினைவாக...
- மட்டுவில் ஞானக்குமாரன் -
சோடிக்கண்கள் கண்டதை
கோடிக்கண்களுக்கு காட்டியவன்
மகேந்திரன்.
பாலு எனும் இரட்டைவாலுக் குருவி
இறக்கை விரித்து எங்கே போனதோ
தலைமுறைதாண்டி எதார்த்தத் திரைக்கதை வேண்டி
தமிழகம் வந்த
கமராவை காலமா கவர்ந்தது?
அவனின் கூடாக
மற்றவரின் கூட்டாக கட்டிய வீடுக்கு
வண்ணவண்ணப்பூவெலாம் கூடி
விருதுகள் கொடுத்தன
அவனுக்கு மட்டுமே தெரிந்த மூன்றாம் பிறையை
யாருக்கும்; இதுவரை தோன்றாப் பிறையை
பாரே பார்க்க
திரையிலே காட்டினான்
தன் சோடிக்கண்களால்
கண்ட இன்பத்தை
கோடிக்கண்களுக்கு விருந்தாக்கி ஊட்டினான்
இலக்கியத்தை
சினிமாவாக்கி விற்கத்தெரிந்தவர் மத்தியில்
சினிமாவையே இலக்கியமாக்கி கற்கும்
திறன் மிக்கவன்.
பனிமுகில் இவன் படங்களில் வந்தால்
பார்ப்பவர் உடலைக்
கூதல் வந்து தைக்கும்
பூ இதழை இவன் படம் பிடித்தானெனில்
வெள்ளைத்திரையிலும் ஈக்கள்
மொய்க்கும்.
ஒருவேளை தள்ளாத வயது வரை
இருந்திருந்தாலும் கூட
அவன்
பொல்லூன்றி இருக்கமாட்டான்
ஊன்று கோலுக்குப்பதிலாக ஒளிப்படக்கருவியின்
ஏந்து கோலையே ஏந்தியிருப்பான்.
இந்தச்சேவல்
தாய் தேசத்தை நினைத்துக்
கூவவில்லை என்ற
வாதமிருக்கிறது அனேகருக்கு
அவன் என்ன கோலிவூட்டிலா படமெடுத்தான்
நினைத்ததை எல்லாம் படமாக்க
கோழிக்கூண்டில் அல்லவா அடைபட்டுக்கிடந்தான்
மீறிக் கூவியிருந்தால்
அவனை பிரியாணி அல்லவா போட்டிருப்பார்கள்
காட்சிப்பிழை எனில்
அதனை நிவர்த்தி செய்யும் உத்தி தெரியும்
இது ஆட்சிப் பிழை
பாவம் அவன் என்ன செய்வான்
கோடி கொட்டி
படம் எடுப்பவர் மத்தியில்
மனங்கள் கோடி தொட்ட படமெடுத்தவன்
அவன் படம்பிடித்தால்;
அழுக்குக் கூட அழகாகத் தெரியும்
புழுக்கூட பாம்பாக விரியும்.
இந்திரன் ஒருவன் இங்கே பிரம்மன் ஆகினான்
ஆம் படங்களைப் படைத்ததால்
பிரம்மன். ஆகினான்
மகேந்திரன்
படங்களைப் படைக்க வந்த பிரம்மன்
அவன் தொப்பி போட்ட பிரம்மன்
.
நீயோ வள்ளுவனையே மிஞ்சியவன்
அவனோ இருவரியில் தான் குறள் சொன்னான்
இவனோ ஒரு காட்சியிலேயே
தன் திறன் சொன்னான்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
மணிபாரதி (அம்பாசமுத்திரம்) கவிதைகள்!
1. கூடு
மேய்ச்சலுக்கு போன
மாடுகள் கொட்டடி திரும்பின,
உணவு தேடியலைந்த
பறவைகள் கூடு திரும்பின,
பணி முடித்த
மனிதர்கள் வீடு திரும்பினர்,
அழுக்கடைந்த ஆடையுடனும்
கோணி நிறைய குப்பைகளுடனும்
தனக்கான இடம் தேடி
என்றும் போல்
இன்றும் அலைகிறான்,
வீதியில் அனாதையாய்
விடபட்ட பைத்தியக்காரன்,
2. மழை
மழைபற்றி கதையிருந்தது,
மழைபற்றி நினைவு இருந்தது,
மழை பற்றி கவிதையிருந்தது,
மழை பற்றி எதிர்பார்ப்பிருந்தது,
அனைத்தையும் சுமந்தபடி
பெய்துகொண்டிருக்கிறது மழை,
உள்ளேயும்,வெளியேயும்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
நவயுகத் தமிழரின் நடைமுறைக் கலாச்சாரம்
--பேராசிரியர் கோபன் மகாதேவா--
கலாச்சாரம் எனும்பதத்தைக் காலமெல்லாம் கேள்வியுற்றும்
விலாவெலும்பு வலிக்குமட்டும் அதைப்போற்றிப் பேணிவந்தும்
கலாச்சாரம் என்னவென்ற இலக்கணத்தை விளக்குதற்கு
வியாக்கியானங்கள் தேடி வித்தகரும் அலைந்திடுவர்.
இனமொன்றின், குழுவொன்றின், குடும்பத்தின் வழக்கங்கள்
கனிவுற்றுக் காலத்தால் மெருகூட்டி முதிர்வு அடைந்து
மனதினிலே பிணக்கின்றித் தன்னியக்க இயல்பாக...
கனவில்போல் நடைமுறையில் நடப்பதுவே கலாச்சாரம்.
உணவினிலும் உடையினிலும் உள்ளதுவும் கலாச்சாரம்
குணத்தினிலும் கலைகளிலும் வீட்டினிலும் வீதியிலும்
பேச்சினிலும் மூச்சினிலும் பிரார்த்தனைகள், பிணைப்பு எதிலும்...
வீச்சினிலும் விடுப்பினிலும் கலாச்சாரம் விதந்திருக்கும்.
தமிழரது கலாச்சாரம் தரணி தனில்
முதல் உதித்த தரு ஒன்று, என்போம்.
சமயமதாம் சைவமும், தமிழும் அதன்
சுமைதாங்கும் தூண்கள் என்போம்.
பத்தாயிரம் ஆண்டாய் சங்கங்கள் தனில்
பேசிஅதை வளர்த்தது என்போம்.
வித்தைமுறைக் கலைகள் எம்வாழ்வினிலே
எண்ணெட்டு வழிகள் என்போம்.
நவயுகமாம் இந்நாளில் அவையெல்லாம்
தமிழர்க்குச் சரியோவென்று
சமகால ஆய்முறையைச் சமமான
மனநிலையில் செலுத்தி நோக்கில்...
எமதுள்ளத்து அடியிருந்து உரத்தவொரு
குரல்தனிலே கேட்கும் செய்தி:
உமக்குகந்த அம்சங்கள் தமை ஏற்று,
மற்றவையை மறப்பீர், என்றே.
குளிர்தேச மேற்குலகின் கோவில்களுட்
செல்ல மேலாடையொன்று இன்றி
பழங்கால வழக்கம்போல் வெறும்தேகம்,
கால்களுடன் செல்லல் ஆமோ?
எலியோட்ட உலகினிலே ஓயாமல்
உழைப்பதுவே இன்று எம் வாழ்க்கை
கலிதீர அன்று போல் விரதங்கள்,
பூசைகளைச் செய்தல் ஆமோ?
காதலே மணவாழ்வின் உயிரென்று, எம்
கன்னியரே இன்று தம் சோடி தேட,
மோதலிலும் முறிவிலுமே முடிவடையும்
பேச்சு-மணம் பேணல் நன்றோ?
மூடுபட்ட வீடுகளின் மூலைகளில்
மட்டை-விறகுப் புகை தூண்டலாமோ?
சூடு-குறை வானிலையில், நாட்டினைப் போல்
வெளி-வாழ்க்கை நடத்தலாமோ?
குளிர், கூட்டம், இருளிடையே நாளாந்தம்
பிரயாணம் செய்கையிலே
முழிப்பான தங்க-நகை, நாலு-முழ
வேட்டி, நலங்காத சேலை கட்டி
சுரங்கவழி செல்வதுவும், பேருந்தில்
ஏறுவதும், விரைந்து ஓடோடி
இரவுபகல் திரிவதுவும் எவ்வாறு
வசதி என்று எனக்குச் சொல்வீர்.
பெண்வீட்டில் குளிப்பாட்டல்,
பொன்னுருக்கல், பலநூறு விருந்தினர்க்கு
எண்ணற்ற ஒழுங்குகளை ஏற்படுத்தி
சாத்திரத்தால் சுபநேரம் பார்த்தும்...
போக்குவரத்துச் சுணக்கால், பெண்ணோ
மணமகனோ பிந்திச் சென்று
ஏக்கமுடன் கணம் பிந்தித் தாலிகட்டல்,
நாம் தேடும் கலாச்சாரம் தானா?
தமிழர்காள்! தயங்காதீர்! வசதியில்லாக்
கலாச்சாரம், எம் காலன், காண்பீர்!
உமது உமது அனுபவ-அறிவால்
உமக்குரிய கலாச்சாரத்தினைத் தெரிந்து
உமதடிமை அதுவென்றும், நீவிர்அதன்
மேலென்றும், உணர்ந்துகொண்டு
சமகால வாழ்க்கை வசதிக்கு, உம்
கலாச்சாரங்களையும் மாற்றிச் செல்வீர்!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems