துவாரகன், - கே.சித்ரா , ப.மதியழகன் , மன்னார் அமுதன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி, வேதா இலங்காதிலகம் , புலவர் சா இராமாநுசம் ( சென்னை ) கவிதைகள்
தீராக்காதலியின் வினாக்கள
-துவாரகன்
என் உதட்டுச்சாயம் பற்றியும்
கன்னத்தில் விழுந்து தழுவிக் கொண்டிருக்கும்
கூந்தல்அழகு பற்றியும்
நீ ஏன் இப்போது பேசுகிறாய் இல்லை
என் அன்பும்
தீராக்காதலும்
ஏன் உன்னிடம் தோற்றுப்போகின்றன
என் நகப்பூச்சுக்கே
நாளும் புகழ்ந்து தள்ளும் நீ
நான் பேசும்போதெல்லாம்
வானத்தையும் பூமியையும் பார்த்து
ஏதேதோ பிதற்றுகிறாய்
தீராக்காதலி
அடுக்கடுக்காக
மீளவும் கேட்கத் தொடங்கிவிட்டாள்.
ஜோடிப்புறாக்கள் கொஞ்சிப்பேசும்
அழகுடன் கூடிய
பரிசுப்பொருளுடன்
பேச முடிவுசெய்துவிட்டேன்.
அவளின் கேள்விக் கணைகள்
முழுதாக என்னை மூடும்முன்னே!
சபிக்கப்பட்ட உலகு
-துவாரகன்
வார்த்தைகளை மண் மூடுகிறது
முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது
பூதத்தீவுப் புதிர்போல
ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது
கணங்கள்தோறும்
மெளனமே இலகுவாயிற்று
நினைவு குமட்டுகிறது
எல்லாக் கண்களும் விழித்துப் பார்க்க
இயலாமை… மரணம்…
உயிரின் மோகம்…
ததும்பி வழிய
முகத்தைப் புதைத்துக் கொண்டு நடந்தேன்
நினைவு துரத்துகிறது.
மறதியே!
என் இருளறையை உனக்குக்
காணிக்கையாக்குகிறேன்
நீ வாழ்க
இப்போது மட்டும்
எல்லோருக்கும் இலகுவாய்க் கிடைக்கிறது
ஒரு சுருக்குக்கயிறு.
06/2011
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
தெரியாது
- கே.சித்ரா -
தெரியாது ..
உண்மையிலேயே தெரியாது ..
வினை விதைத்தவன் வினை அறுப்பான் , தெரியுமா ?
வினை விதைக்காதவன் வினை அறுப்பதாலும்,
விதைத்தவன் அறுக்காமலேயே சேர்ந்து விட்டதாலும் -
தெரியாது ...
அலுவலகத்தில் அடுத்த ராஜினாமா ,யார் ?
இராணுவ ரகசியம் ஒன்று - முன்பே
தெரியுமென்ற பிரமையை ஏற்படுத்தலாம் என்றபோதும் -
தெரியாது ...
கடவுளென்று தனிநபர் இருக்கிறாரா ?
பிரார்த்திக்கும் போது
பாதுகாப்பும், நிம்மதியும் உணர்ந்த போதிலும் -
தெரியாது ...
தெரிந்திருப்பதாக நினைத்து ஏற்படும் ச்ங்கடங்கள் ... ?
‘தெரியாது’ என சொல்ல முடிவதால்
உண்மையிலேயே தெரியாது ...
விரத பேதம்
- கே.சித்ரா -
கண்ணுக்கெட்டிய
கைக்கெட்டிய தூரத்தில்
உணவு இருந்தும்
உண்ணாமல் இருந்தால் - விரதம்
அது புண்ணியம்
அதுவே போராட்டம்.
கண்ணுக்கெட்டியவரை
கைக்கு கிட்டிய தூரத்தில்
உணவை காட்டாமல் இருந்தால் !! - பட்டினி
அது விதி
போராடி முன்னேற ஆலோசனை.
செய்தித்தாளில் வர வேண்டுமெனில்
இறப்பு - குறைந்தபட்ச தகுதி
பட்டினியில் தள்ள பட்டவனுக்கு..
வயிறு காய்வதிலும்
இருக்க பட்டவனென்றும்
இல்லாத பட்டவனென்றும் உண்டோ ??
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் ...
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
மனிதநேயம்
--மன்னார் அமுதன் -
தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது நெடுஞ்சாலை
“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
தரிசனம்
- ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர்) -
உடலென்னும் கூண்டுக்குள்
உயிர்ப்பறவை சிறை இருக்க
சிறகிருந்தும் பறக்க விழையவில்லை
சிறு நெல் மணிகளுக்கு ஆசைப்பட்டு
பிறவாமல் பிறப்போம்
இறவாமல் இறப்போம்
கண்ணீர்க் கோடுகளால
காவியங்கள் பல படைப்போம்
ஜாதகக் கட்டங்களில்
என்ன இருக்கிறது
ஒரு அடி எடுத்து வைத்தால்
இமயமலை கூட
இரண்டாய்ப் பிளக்கிறது
நதி போகும் போக்கிலேயே
போனால்
கடல் போய்ச் சேர்வாய்
எதிர் நீச்சல் போடு
ஊர் வந்துச் சேர்வாய்
மழைக்கு மேகமா முகவரி
வந்து விழும் இடத்தில்
தன்னைத் தொலைத்தழும் மழை
வானத்து வெண்ணிலா
சேதி பேசும்
நாணத்தை விட்டொழித்து
தென்றல் வீசும்
விழிகள் நான்கும் ஒன்றுகலக்கும்
காதல் விதை முளைக்க
சமயம் பார்க்கும்
ராஜவீதியில் தேர் வலம் வரும்
நீ வடம் பிடித்தால்
தெய்வம் உயிர் பெறும்.
தீர்த்தக்கரை
- ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர்) -
காற்றுக்கு தலைவணங்காத மரம்
முறிந்து விழும்
ஆற்றுப்படுத்த அம்மா இல்லாததால்
குழந்தை அழும்
கார்மேகம் முழக்கமிடும்
மழை தானே நிலத்தின் வரம்
வெண்மேகம் காற்றிலாடும்
அலை வந்து கரையில் மோதும்
சித்திரையில் வெயில் கொளுத்தும்
தென்றல் வந்து சாந்தப்படுத்தும்
திருவிழாவில் தேவதைகள் கூட்டம்
காளையர்களின் ஏக்கப் பார்வை
கண்டு சிரிக்கும்
எத்தனையோ பூக்கள் பூக்கும்
சில மட்டுமே உதிராமல் காய்க்கும்
அதிகாலையில் கிழக்கு வெளுக்கும்
மூடுபனி மெல்ல விலகும்
குயில்கள் பாடும் அமுத கானம்
கேட்பதற்கோ இணையைக் காணோம்
நதிவெள்ளம் கடலைத் தேடும்
பூக்கள் தேவகானம் பாடும்
கண்ணில் உந்தன் பிம்பம் நிழலாடும்
காதல் வந்தால்
காலம் பறந்தோடும்.
உதிரச் சுவடுகள்
- ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர்) -
குருதி கலந்த நீரைத்தான்
குடிக்க வேண்டியிருக்கிறது
இரத்தம் தோய்ந்த உடைகளைத்தான்
உடுத்த வேண்டியிருக்கிறது
ஈழத்து தாய்மார்களின் கண்ணீரில்தான்
குளிக்க வேண்டியிருக்கிறது
இரத்த வாடையை முகர்ந்து கொண்டே
உண்ண வேண்டியிருக்கிறது
போரில் இறந்து போனவர்களின்
கல்லறை அருகே
உறங்க வேண்டியிருக்கிறது
யுத்தத்தில் கண்களை இழந்த
தமிழர்களின் முகங்கள்
கண்ணை விட்டு அகல மறுக்கிறது
ஈழத்தமிழர்களின் கனவுகள்
புதைக்கப்பட்டு
முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கிறது
தமிழினத்தை வேரறுக்க முயலும்
கூட்டத்தை
ஒன்றும் செய்யாமல்
உலகம் கைகட்டி வேடிக்கைப்
பார்க்கிறது
அடிபட்ட பாம்பு தான்
படமெடுக்கிறது
ஒடுக்கப்பட்ட இனம் தான்
விஸ்வரூபம் எடுக்கிறது
நாளை நமது நாளாகும்
என்ற நம்பிக்கை
இன்னும் எம்மிடையே
இருக்கிறது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
பாக்கியவதிகள்
- கிண்ணியா எஸ். பாயிஸா அலி -
ஒட்டிக் கிடக்கும் வர்ணப் பூச்சுக்கள் விட்டும்
ஒதுங்கிப் போவெனத்தான் சொல்லுது
ஓயாது உள்ளொலிக்குமோர் அசரீரி.
பலவேளைகளில்
பாதப் பெருவிரல் சுரண்டுகிற
செல்லப் பூனைக் குட்டியின் குழைவொலியாகவும்
மிகச்சில பொழுதுகளில்
அதுவோர் அடிமைக்கான அதிகாரக் குரலாயுங் கூட.
திரிக்கவும் உரிக்கவும் மட்டுமே விழைகிற
கூர்நகங்களிடையேயான தொடர் பயணங்களுக்குள்
எப்படித் திறப்பேன் முகத்திரை.
அரங்கும் தளமும் அவளுக்குமென்றான பெருமித முகங்களின்
மறுபுறத்திலே பதிந்து கிடக்கிற ஆழமான கீறல்களூடே
மெல்லமாய் உணர்கிறேன் ....
வீடும் அது சார்ந்ததும் மட்டுமேயான
ஒற்றைச் சிந்தனைக்குள் நிறைவு கண்ட
உம்மம்மாக்கள்தான் பாக்கியவதிகள்.
பச்சைப்பசும் புல்வெளி
- கிண்ணியா எஸ். பாயிஸா அலி -
சின்னக் குருகுகளின் கீச்சொலிகளில்
திளைக்கிறது கூடு.
அசைவிலும் நகர்விலும் திசையொன்றாகியே
ஈருயிர் ஓருயிராகினோம்
பச்சைக் கணுக்களில்
புதிதாய் மேலுமீருயிர் துளிர்த்திட
சிலிர்;க்கிறது நந்தவனம்.
மிரளுகிற வாழ்வில்
சுழலும் பெரும்புதிர்
மெதுமெதுவாய் புரிபடத் தொடங்குகையில்
நிறைகிற பாற்குடம்
கன்றுகளைச் சுற்றுகிற
கறுப்புவெள்ளைப் பசுவாக
சூழவிரியுது
பச்சைப்பசும் புல்வெளி.
போதுமோ நம் தோப்பினுள் பட்டாம் பூச்சிகள்
காற்றாய் கதிராய் கடலாய்
சிறகடிக்கையிலே
வாராதோ
உயிர்க்;கரையை உரசிக் கடக்கிற
ஓவியக்குழந்தையாயும்..
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
ஆசிரியர் பணி – ஆசிரியம்
வேதா. இலங்காதிலகம் ( ஓகுஸ், டென்மார்க்)
சீலாச்சாரமான எம் தமிழ்
கலாச்சார மரபின் வேர்.
விலாசம் தரும் வானவில்
விற்பன்ன விதைப்பு ஆசிரியப்பணி.
அகக்கண் திறக்கும் திறவுகோல்.
அறிவின் அட்சய பாத்திரம்.
அற்புத அறிவுப்படை ஆசிரியம்.
கற்பக விருட்சம் ஆசிரியப் பணி.
மொழித் தடங்களைச் சிறந்த
மைத் தடங்களாக்கும் ஆசிரியரதை
நல் வழித்தடங்களாக்குகிறார் அறிவாற்றலால்.
நல்லெண்ணத் தடங்களோடு வாழ்வை
வண்ணத்தடங்களாக்குகிறார் சிற்பியாகி.
காலடித் தடம் சிறப்பாயூன்றுவோன்
கல்வியால் சிகரத்தில் தடம் பதிக்கிறான்.
நல்ல பிரம்மவித்தைக்காரன் ஆசிரியன்.
குறிக்கோள் வாழ்விற்குக் கோடிழுப்போன்.
குறிப்பான முகவரியைச் சுட்டுவோன்;.
ஆற்றலின் சக்தியால் நல்ல
அறிவிற்குத் தீனி தருபவன்.
அறத் தேரின் அச்சாணியானவர்.
திறமையாளனை ஏற்றும் ஏணி.
சிக்கலற்ற சமுதாயம் ஆக்கும்.
மக்களின் முன்னோடி ஆசிரியன்.
8-5-2011.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
தேசப் புகழைப் பாடுங்கள்
புலவர் சா இராமாநுசம் ( சென்னை )
முத்துக் குமாரை பின்பற்றி-கிருட்டின
மூர்த்தியும் பெட்ரோல் தனைஊற்றி
வைத்துக் கொண்டார் தீயென்றே-இங்கே
வந்தசெய்தி பொய் யென்றே
செத்துப் போனது எதற்காக-என
செய்கிறார் வாதம் அதற்காக
எத்தனை கொடுமை தமிழ்நாடே-இனி
எரிக்க வேண்டாம் சுடுகாடே
ஒற்றுமை நம்மிடை வேண்டாமா-கூடி
ஒன்றாய் உறுதி பூண்டோமா
பெற்றவர் அங்கே அழுதிடவும்-அவர்
பிள்ளையை பலவாய் எழுதிடவும்
கற்றவர் செய்யும் செயலல்ல-வீண்
கதைகள் சொல்வதும் பயனல்ல
மற்றது உண்மை எதுவென்றே-யாரும்
மறைக்க இயலா வரும்நன்றே
மூடி மறைப்பதால் பலனில்லை-இன்னும்
முள்ளி வாய்க்கால முடியவில்லை
கேடி பக்சே கொடுங்கோலே-தட்டிக்
கேட்க அங்கே நாதியிலே
வாடியே பட்டி மாடுகளாய்-அங்கே
வாழ்வார் துயரை ஏடுகளே
தேடி எடுத்துப் போடுங்கள் –பின்
தேசப் புகழைப் பாடுங்கள்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems