பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

தாமரைச்செல்வியின் படைப்புகள்: சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா? அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா?

•E-mail• •Print• •PDF•

தாமரைச்செல்வி1970களின் பிற்பகுதி. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் அதிகமாக வாசிக்கப்பட்ட காலம் அது. இதற்கான வாய்ப்பை வீரகேசரி உருவாக்கியிருந்தது. அப்போது ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வீரகேசரி, மாதம் ஒரு நாவல் என்ற அடிப்படையில்  வெளியிட்டு வந்தது. அதில் பல புதிய எழுத்தாளர்களும் அறிமுகமானார்கள். அப்பொழுதுதான் தாமரைச்செல்வியின் ‘சுமைகள்” என்ற நாவலையும் வாசித்தேன். அந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு வயது இருபது அல்லது இருபத்தொன்றாக இருக்கலாம். அந்த நாவல் அதிகம் என்னைக் கவர்ந்ததற்கு இரண்டு காரணங்களிருந்தன. ஒன்று, நாவலில் இடம்பெறும் களத்தின் அறிமுகம். அடுத்தது, எழுதிய தாமரைச்செல்வி எங்கள் ஊருக்கு அண்மையில் இருந்தார் என்பது. இதற்குப் பின்னர் தாமரைச்செல்வியின் எழுத்துகளில் ஒரு கூடுதல் அவதானிப்பு. அவர் அநேகமாக விவசாயிகளின் பிரச்சினைகளை, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளையே எழுதினார். நாங்களும் ஒரு விவசாயக் குடும்பம் என்பதால் எங்களின் பிரச்சினைகள், எங்களுடைய கதைகளாகவே இருந்தன அவருடைய கதைகள். இதனால், எங்களின் குடும்பத்தில் தாமரைச் செல்வியின் எழுத்துகளுக்கு உச்ச வரவேற்பு. அவருடைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வரும்போது இந்த வரவேற்பின் உற்சாகத்தை எங்களின் வீட்டில் காணலாம்.

இந்தக் காரணங்களால் தாமரைச்செல்வியைச் சந்திக்க வேணும் என்று விரும்பியிருந்தேன். எங்கள் சிததப்பா, பெரியக்கா இருவருக்கும்கூட அந்த ஆவலிருந்தது. அந்த நாட்களில் நாங்கள் தாமரைச்செல்வி இருந்த பரந்தனுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். பரந்தனில் இருந்த சந்தைக்கு எங்களின் தோட்டத்துப் பொருட்களைக் கொண்டு வருவோம். அந்தச் சந்தையிலிருந்து ஒரு கிலோ மீற்றருக்குள்தான் – குமரபுரத்தில் – தாமரைச்செல்வியின் வீடிருந்தது. ஆனால், ஏனோ அவரைச் சந்திக்க வாய்த்ததில்லை. சந்திக்க வேணும் சந்திக்க வேணும் என்று காலம் கடந்ததே தவிர, அவரைக் காண்பதற்கு வாய்க்கவில்லை. 1980 களில் நான் வேறு களங்களுக்கு மாறிவிட்டேன். நாட்டு நிலைமைகளும் மாறியிருந்தன. தாமரைச்செல்வியின் எழுத்துகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. அவர் ஏராளமாக எழுதிக் கொண்டிருந்தார். வாழ்க்கையின் பாதிப்புகள், சூழலின் நெருக்கடிகள், சனங்களின் மனதிலிருந்த உணர்வுகள் என எல்லாவற்றையும் அவர் எழுதினார். அவருடைய கதைகள் யதார்த்தச் சித்திரிப்புடையவை என்பதால் அவை பரந்த வாசிப்புக்கும் கூடுதலான கவனத்திற்குமுரியனவாக இருந்தன. அத்துடன் வன்னிப் பகுதியின் – கிளிநொச்சிப் பிரதேசத்தின் அடையாளத்தை அவரு டைய கதைகள் மேற்கொண்டு வரும்போது அது இன்னும் கூடுதலான கவனத்தைப் பெற்றன. அறியப்படாத பிரதேசத்தின் அறியப்;பட வேண்டிய கதைகளாக அவை இருந்ததே இதற்குக் காரணம்.

‘தாமரைச்செல்வியின் கதைகளில் நெல்லின் வாசனையை, வயல் நிலத்தின் மணத்தை, விவசாயக்; குடும்பங்களின் விருப்பங்களை, அவர்களின் தேவைகளை, அவர்களுடைய பிரச்சினைகளை, அந்தக் குடும்பங்களின் சந்தோசங்கள், துக்கங்களை எல்லாம் காணமுடியும்’ என்று செம்பியன் செல்வன் அடிக்கடி சொல்வார். இது மிகச் சரியான கூற்றே. தாமரைச்செல்வியின் குடும்பமும் ஒரு விவசாயக் குடும்பமே. அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் முழுவதும் அந்த விவசாயக் குடும்பச் சூழலில் பெற்றுக் கொண்;டவையே. ஆக, அவருடைய பெரும்பாலான கதைகளும் தன்னனுபவத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டவையே. என்றபடியால் அந்தக் கதைகள் அதையொத்த அனுபவப் பரப்பைக் கொண்டவர்களிடம் அதிக ஈர்ப்பைப் பெற்றன. தவிர, தாமரைச்செல்வியின் கதை சொல்லும் முறையும் மிகச் சாதாரணமானது. ஆனால், நுட்பங்கள் நிறைந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அடிக்கடி சொல்வது மாதிரி, ‘மொடேர்ண் ஆர்ட் டைப் பார்ப்போருக்கு அதை மிகச் சுலபமாக வரைந்து விடலாம் போலத் தோன்றும். ஆனால், நாம் நினைப்பதைப்போல அதை அத்தனை இலகுவாக வரைந்து விடமுடியாது. ஏனெனில், அது உச்சமான படைப்பாற்றலின் வெளிப்பாடு என்பதை அதை வரையத் தொடங்கும்போதே நாம் உணர்ந்து கொள்வோம்” என்பதைப் போல தாமரைச்செல்வியின் கதைகளைப் படிக்கும் போது அதைப்போன்று, ஏராளம் கதைகளை நாம் எழுதிவிடலாம் போலத் தோன்றும். ஆனால், நாம் அப்படி எழுதமுனைந்தால் அது அத்தனை எளிய விசய மில்லை என்று புரியும். இதுதான் தாமரைச்செல்வியின் கதைகளின் தரத்தையும் நுட்பத்தையும் உணர்த்துகின்ற விசயம்.
மிக எளிய மொழியில், மிகச் சாதாரணமான முறையில் அவர் தனது கதைகளைச் சொல்லி விடுவார். யதார்த்தவாத எழுத்துமுறையிலேயே நின்றியங்கியவர் தாமரைச்செல்வி. அந்த எழுத்து முறையில் நின்றுதான் அவர் இப்போதும் எழுதுகின்றார். தாமரைச்செல்வி எழுதத் தொடங்கிய பின்னரான 1970 – 2010 வரை யான இந்த நாற்பது ஆண்டுகாலத்தில் தமிழ்ச்சூழலில் பல எழுத்துமுறைமைகள், கோட்பாடுகள் எல்லாம் வந்து விட்டன. பல பரிசோதனை முயற்சிகள் நடந்திருக்கின்றன. பல படைப்பாளிகள் புதிய வடிவங்களில், புதிய கோட்பாடுகளில் எழுதி வெற்றியடைந்திருக்கிறார்கள். இதனால் யதார்த்தவாதம் செத்துவிட்டது என்ற குரல்கள் கூட எழுந்தன. ஆனால், இன்னமும் யதார்த்தவாதம் தன்னுடைய பலத்தை இழக்காமலிருக்கிறது. யதார்த்தவாதத்தில் பல படைப்பாளிகள் மிக உச்சமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். அவர்களைப்போல, எத்தகைய எதிர்க்குரல்கள், மாற்றுப் படைப்பு முறைமை என்றெல்லாம் புதிய அலைகள் வந்தபோதும் அவற்றைப் பற்றிய கவலைகளில்லாமல் தனக்கெனச் சாத்தியப்பட்ட முறைமையில் எழுதிக் கொண்டிருந்தவர் தாமரைச்செல்வி. அதேவேளை அந்தவகைப் படைப்புகளை அவர் புறக்கணிக்கவும் இல்லை.
பொதுவாகவே தாமரைச்செல்வியிடம் இருக்கும் ஒரு இயல்பு, விவாதங்கள், சர்ச்சைகள், குற்றச்சாட்டு கள், அதிதீவிர நிலைப்பாடெடுத்தல் போன்றவற்றில்; இருந்து விலகியிருத்தலாகும். அவர் எழுதத் தொடங்கிய காலம் இலங்கையில் பெண்கள் அமைப்புகள், பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வுகள் மேற்கிளம்பத் தொடங்கிய காலகட்டம். என்றபோதும் இந்த அமைப்புகள் எதிலும் அவர் நேரடியாகத் தொடர்போடிருந்தார் என்பதற்கான ஆதரங்களைக் காண முடியவில்லை. ஆனால், பெண்கள் பற்றி, பெண் அடையாளம் பற்றி, பெண்களின் பிரத்தியேகமான பிரச்சினைகளைப் பற்றி அவர் நிறைய எழுதியிருக்கிறார். நானறிந்தவரையில், இனப்போரில், இடம் பெயர்வுகளில் அதிகமதிகம் பிரச்சினைகள் பெண்களுக்கே என்று இலக்கியத்தின் வழி (சிறுகதைகளில்) வெளிப்படுத்திய முக்கியமான படைப்பாளி தாமரைச்செல்வி. இந்த வகையில் அவருடைய பதிவுகள் முக்கிய மானவை. ஒரு காலகட்டத்தின், ஒரு பிரதேசத்தின் (போர்ப்பிரதேசத்தின்) சமூக வரலாற்று ஆவணங்கள் அவை. பெண்ணுரிமை பற்றிய பிரக்ஞை அவரிடம் அதிகமுண்டென்பதற்கு அவருடைய எழுத்துகள் ஆதாரம். ஆனால், பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள், சர்ச்சைகள், மற்றும் பெண்கள் அமைப்புகளுடன் அவர் எப்போதும் நேரடியாகத் தொடர்போடிருந்து அவற்றில் ஈடுபடவில்லை. மேற்குறிப்பிட்ட அவருடைய பொது இயல்பு இதற்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும்.

தாமரைச்செல்வியின் காலகட்டத்தில் எழுதிய ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பவானி, தமிழ்ப் பிரியா, ஜனகமகள் சிவஞானம், குறமகள் போன்றோரில் மற்றவர்களை விட்டு தாமரைச்செல்வி விலகிய இடம் அவருடைய கதைப்புலமும் தொனியும் நிலையும் நிலைப்பாடுமாகும். தார்மீக அடிப்படைகளை நோக்கிய, மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்புலகத்தை தமது எழுத்துக்கு அவர் ஆதாரமாகக் கொண்டிருந்தபோதும் அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்த எந்த இலக்கியப் போக்கிலும் தன்னை அடையா ளப்படுத்திக் கொள்ளவில்லை தாமரைச்செல்வி. மட்டுமல்ல, எந்த இலக்கிய அணிகளிலும் அவர் சேர்ந்திருந்ததுமில்லை. அப்பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தேசிய கலை, இலக்கியப் பேரவை, எஸ்.பொவின் நற்போக்கு அணி, அலை, பூரணி, சமர் இதழ்கள் சார்ந்த அமைப்புகள் எனப் பல இலக்கிய இயக்கங்கள் இருந்த போதும் எதிலும் தாமரைச்செல்வி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. இது ஈழச்சூழலில் ஒரு அபூர்வமே. அத்துடன் எந்த வரையறைகளையும் தன் எழுத்துக்கும் இயக்கத்துக்கும் அவர் வைத்துக்கொள்ளவில்லை. அவருடைய நோக்கமெல்லாம் சனங்களிடம் அதிகமாகச் சென்று சேரக்கூடிய ஊடகங்களின் வழியில் தன்னையும் தனது எழுத்துக்களையும் கொண்டு செல்வதே. இதில் அவர் அதிக வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், அவர் எந்த அணிகளிலும் சேரந்து கொள்ளாதிருந்ததன் காரணமாக அவரை விமர்சன அரங்கில் கவனப்படுத்துவதற்கு சற்றுக் காலம் பிடித்தது. தாமரைச்செல்வியின் கதைகள் ஈழத்துப் படைப்புச் சூழலில் தவிர்க்க முடியாதவை என்று உணரப்படும்வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இதுபற்றி அவர் என்றும் கவலைப்பட்டதாக இல்லை. அவருடைய கவனம் எல்லாம் தனது எழுத்துகள், அவற்றை வாசிக்கும் வாசகர்கள் என்பதே. இறுதியில் அவர் பெரும் வெற்றியைப் பெற்றார்.

‘தாமரைச்செல்வி எழுதத் தொடங்கிய பின்னரான நாற்பது ஆண்டுகால சமூக இயக்கங்கள் எதிலும் இணைந்து கொள்ளாமல், அல்லது அவற்றைப் பற்றிய எதிர்வினைகள், அபிப்பிராயங்களில்லாமல் எப்படி ஒரு படைப்பாளியால் இருந்திருக்க முடியும்?” என்று ஒருவர் கேட்டார். ஏனெனில் இந்தக் காலகட்டம் என்பது ஈழத்தின் சமூக, அரசியல் விசயங்களில் பெருந்தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. இவற்றில் சேர்ந்தியங்காமல் அல்லது, இவற்றுடன் மிகக் குறைவு. அதிலும் வடபகுதியில் எந்த முத்திரையும் இல்லாத படைப்பாளிகள் இருந்திருக்கவே முடியாது. ஆனால், விதி விலக்காக இருந்த ஒரு சிலரைப் போல தாமரைச்செல்வி இருந்தார். என்றபோதும் எதிலும் ஒட்டிக் கொள்ளாமல், எரியும் பிரச்சினைகளில்  சம்மந்தப்படாமல், எதிர்வினையாற்றாமல் அவர் இருக்கவில்லை. சமூக ஏற்றத்தாழ்வுகள், இனப்பிரச்சினையின் பாதிப்புகள், இராணுவ அதிகாரம், போர், அகதி வாழ்க்கை, தமிழ்பேசும் மக்களின் அரசியல் எண்ணக்கரு என்று அவர் எல்லாவற்றிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டு எழுதினார். குறிப்பாக ஆனையிறவு, பரந்தன் பகுதிகள் ஒரு காலத்தில் இராணுவ வலயங்களாக இருந்த 1985 களிலேயே இடப்பெயர்வுகளையும் அழிவுகளையும் சந்திக்கத் தொடங்கினார். இதனால்; அவர் எழுதிய கதைகளின் சேகரிப்புகளையே அவர் இழந்திருந்தார். ஆனால் தாமரைச்செல்வியின் எழுத்து ஊக்கம் தணிந்து விடவில்லை. இது இன்னும் ஊக்கம் பெற்றது. இதற்கு அவருடைய குடும்பச் சூழல் ஒரு பிரதான காரணம் என்று சொல்லலாம். அவர் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் அவருடைய குடும்பத்தினர் அவருடைய இலக்கிய ஈடுபாட்டையும் எழுத்து முயற்சியையும் எப்போதும் ஊக்கப் படுத்தியே வந்திருக்கின்றனர். தாமரைச்செல்வி எழுதத் தொடங்கிய தொடக்க காலத்தில் அவருடைய தந்தை அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார். பின்னர் அவருடைய சகோதர, சகோதரிகள் ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். அதன்பின்னர் கணவரின் ஊக்கம், பிள்ளைகளின் ஊக்கம், ஒத்துழைப்பு என்று இந்த உற்சாகமூட்டல் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தாமரைச்செல்வியின் குடும்பம், கூட்டுக் குடும்ப அமைப்பைக் கொண்டது. பொதுவாக விவசாயக் குடும்பங்களில் இது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக இன்னும் பல இடங்களிலும் இருக்கிறது. அது விவசாய வாழ்க்கையின் தேவை. இந்த அமைப்பு முறையில் கனிவும் பொறுமையும் நிதானமும் முக்கியமானவை. தாமரைச்செல்வி குடும்பத்தில் மூத்தபெண். இயல்பாகவே குடும்பத்தில் மூத்த பெண் – ஏனைய சகோதரர்களுக்கு ‘அக்கா” என்ற வகையில் வகிக்கின்ற பாத்திரம் தமிழ்க் குடும்ப அமைப்பில் கனிவு நிரம்பியது பொறுப்புகள் அதிகமுள்ளது. தாமரைச்செல்வியின் கனிவு அவருடைய குடும்பத்தின் ஒரு சிறப்படையாளம் என்பதைப் பின்னாளில் அவருடைய குடும்பத்தினருடன் நெருங்கிப்பழகும்போது தெரிந்தேன். 1980களின் முற்பகுதியில் தாமரைச்செல்வியைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பியிருந்தபோதும் அவரைச் சந்திக்க முடிந்தது 1990களின் நடுப்பகுதியில்தான். ஒரு மத்தியானப் பொழுதில், நானும் யோகேந்திரநாதனும் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தோம். அகதிகள் பெருகியிருந்த காலம் அது. அவர்கள் வீட்டில் எப்போதும் பெரும் சமையல்தான் நடக்கும். எல்லோரையும் வரவேற்கிற, விருந்தோம்புகின்ற விவசாயிகளின் வீட்டில் நடக்கின்ற சமையல் அது. எவ்வளவுதான் பெரிய சமையல் என்றாலும், தினமும் அப்படி சமைப்பதென்றாலும் சலிப்போ சோர்வோ ஏற்படுவதில்லை. அதற்குப்பின்னர் பல ஆண்டுகள் அவருடைய வீட்டில் பார்த்திருக்கிறேன், என்னவெல்லாமோ மாறியிருந்தாலும் இந்தப் பெரும் சமையல் மாறவேயில்லை. இடம்பெயர்ந்து அவருடைய குடும்பம் அகதிநிலையிலிருந்த போதும் இந்தச் சமையல்முறை மாறவேயில்லை.
நாங்கள் காலச்சுவடு வாசகர் வட்டத்தை அக்கராயனில் நடத்தியபோது அநேக கூட்டங்கள் தாமரைச் செல்வியின் வீட்டில்தான் நடந்திருக்கின்றன. புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வது, அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சரிநிகர், மூன்றாவது மனிதன், சொல் புதிது போன்ற இதழ்கள் தொடர்பாக கலந்துரையாடுவது என்று ஒரு சிறிய இலக்கிய இயக்கம் தாமரைச்செல்வியின் வீட்டை மையப்படுத்தி நிகழ்ந்தது. அப்போது எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய விசயம் அவரிடம் நிரம்பியிருந்த கனிவே. மட்டுமல்ல, அந்தக் கனிவுதான், மற்றவர்களுக்கு உதவும் ஒரு இயல்பூக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. அதாவது இங்கே கனிவு என்பது கருணையாக பண்பு மாற்றமடைந்திருக்கிறது. அகதி வாழ்க்கையில் சனங்கள் துயரப்பட்ட வேளை யில்,  தம்மால் இயலக்கூடிய உதவிகள் அத்தனையையும் செய்தவர் தாமரைச்செல்வி. அவருடைய குடும்பம் கூட்டுக் குடும்ப அமைப்பைக் கொண்டது என்பதால் இந்த உதவிகளை ஒரு மையப்படுத்திச் செய்வற்கு அவருக்கு வாய்த்தது. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பல கண்டங்களில் வாழ்ந்தாலும் உள்ளர்த்தத்தில் அவர்கள் இன்னும் கூட்டுக்குடும்பத்தின் பிரதிநிதிகளே.

இதை ஏன் இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால், அவருடைய கதைகளில் இந்தக் குடும்ப அமைப்பின் தன்மையை நாம் காணமுடியும். இந்தக் கூட்டுக் குடும்பத்தின் மனம், அதன் பங்கேற்பு போன்றவற்றின் வெளிப்பாடாகவும் அவை இருக்கின்றன. குறிப்பாக அவருடைய ‘பச்சை வயல் கனவு” என்ற நாவல் அவருடைய குடும்பத்தின் கதையைச் சொல்வது போன்ற ஒரு படைப்பே. அத்துடன் கிளிநொச்சி என்ற அமைவிடத்தின் உருவாக்கம், அந்த அமைவிட உருவாக்கத்தின் காலகட்டம், சூழல் என்பவற்றையும் அதனோடிணைந்த வரலாற்று விசயங்களையும் அந்த நாவல் பதிவு செய்கிறது. இது ஒரு விவரணப்பாங்கான நாவல் வகை. பொதுவாகவே தாமரைச்செல்வியின் பிற கதைகளிலும் விவரணப் பாங்கை அவதானிக்கலாம். ஆனால், இந்த விவரணப்பாங்கினூடே தன்னுடைய கலையாக்கத்தை அவர் ஏற்படுத்திவிடுகிறார் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. பிரச்சாரத் தொனியற்ற, இயல்புக்கு முரணான வகையில் தன் எழுத்துகளை தாமரைச்செல்வி முன்வைப்பதில்லை என்பது கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம். உள்ளோட்டங்கள், உள்ளடுக்குகள் அதிகமில்லாத எளிய கதைகளில், எளிமையான கூறுமுறையில் அவர் உணர்த்த முனையும் விசயங்களான அறமே முக்கியம் பெறுகிறது. சரி, ஆனால் இந்த அறம் எதன்பாற்பட்டது என்று யாரும் கேட்கலாம். வாழ்க்கையின் சவால்களை அடைவதற்கு சமனிலையற்ற முறையில் மனிதரை மனிதர் பயன்படுத்தும் அரசியலையும் அந்தச் செயல்முறையையும் எதிர்க்கும் அறம் இது என்பது தாமரைச்செல்வியின் நிலைப்பாடு. இந்த அறத்தை வலியுறுத்தியே அவர் தன்னுடைய படைப்புலகத்தை இயக்குகிறார். அன்பையும் கருணையையும் இரக்கத்தையும் ஆதாரமாகக் கொண்ட ஓருலகத்தைக் காண்பிப்பதன் மூலமாக தான் சுட்டுகின்ற அறத்தை எட்டலாம் என்பது அவருடைய நம்பிக்கை. இதற்காக அவர் கனிவையும் நேசத்தையும் தன் கதைகளில் முடிவுறாமல் எழுதிக் கொண்டிருக்கிறார். அவருடைய பெரும்பாலான கதைகளில் அவருள் ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் ‘கனிவு” என்ற குருதிதான் ‘அறம்” என்ற அடையாளத்தை முன்னிறுத்தத் துடிக்கிறது.

2
வன்னி விவசாயிகளின் வாழ்க்கை பொதுவாக இரண்டு வகைப்பட்டன. ஒன்று ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, அலம்பில், குமுழமுனை, புதுக்குடியிருப்பு போன்ற பழைய வன்னி விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்களின் பிரச்சினைகளும். இது காடுசார்ந்த விவசாயம். சேனைப் பயிர்ச் செய்கையும் இங்கே முக்கியமான ஒரு அம்சம். கிளிநொச்சி போன்ற நீர்ப் பாசனக் குடியேற்றங்களின் விவசாயமும் அந்த விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்களுடைய பிரச்சினைகளும் இன்னொரு வகையானவை. இந்த இரண்டிற்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும் தன்மை வேறுபாடுகள் உண்டு. ஆனால், விவசாய வாழ்க்கை, விவசாயக்கூலிகளின் பிரச்சினைகள் எல்லாம் ஏறக்குறைய ஒரே அடிப்படையைக் கொண்டவை என்பதும் உண்மையே. தாமரைச்செல்வியின் பெரும்பாலான கதைகள் கிளிநொச்சி விவசாயிகளின், விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளை மையப்படுத்தியவை. இந்தப் பிரதேசத்தில் போர் தீவிரமடைந்தபோது இங் கிருந்த மக்களின் கதி என்னவாகியது, அப்போது இந்தப் பிரதேசம் எப்படியாகியது என்பதை ஒரு காலகட்டம்வரையில் அவரும் ஒரு அகதியாக வாழ்ந்து எழுதினார். இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கும் மக்களின் வறுமை, நிலத்தையே ஆதாரமாகக் கொண்ட விவசாயிகள் அந்த நிலத்தை இழக்கும் போது சந்திக்கின்ற அவலம் எப்படியானது என்பதை இந்தக் கால கட்டத்தில் அவர் எழுதிய கதைகள் வெளிப்படுத்துகின்றன. இதில் முக்கியமான சில கதைகள் உண்டு. அதிலும் முக்கியமானது ‘இடைவெளி” என்ற சிறுகதை. இந்தக் கதையை கவிஞர் சிவசேகரம் மொழி பெயர்த்திருக்கிறார். செல்வா கனகநாயகம் தொகுத்த ஈழ இலக்கியத் தொகுப்பில் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது.

இந்தக் கதையை ‘உதிரிப்பூக்கள்” மகேந்திரன் ’1996′ என்ற பெயரில் ஒரு குறும்படமாக்கியுள்ளார். முதிய விவசாயி ஒருவர் இடப்பெயர்வினால் சந்திக்கின்ற உள நெருக்கடியே கதையின் மையக்கரு. இதைப் போல தாமரைச்செல்வியின் வேறு சில சிறுகதைகளும் குறும்படங்களாக்கப்பட்டிருக்கின்றன. இதில் ‘வேலி” என்ற குறும்படம் முக்கியமானது. ஈழத்துத் திரைப் படங்களை எப்படி உருவாக்கலாம்;, அவற்றுக்கான கதைகள் என இயக்குநர் மகேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘தாமரைச் செல்வியின் கதைகள் திரைப்படங்களுக்குரிய கட்டமைப்பையும் கதை கூறு முறையையும் கொண்டுள்ளன. அவருடைய சித்திரிப்பு முறை முக்கியமானது. பாத்திரங்களையும் சூழலையும் இணைத்து கதையை உரு வாக்குவதில் தாமரைச்செல்வி கையாளும் உத்தி ஒரு திரைக் கதையாசிரியருக்கு நிகரானது. இந்தமாதிரி நிறையக் கதைகளை மலையாளத்திலேயே அதிகமாகக் காணமுடியும்” என்று. தாமரைச்செல்வியின் ‘பாதை”, ‘பாலம்” போன்ற கதைகள் திரைக்கதைக்குரிய கூடுதல் அமைவைக் கொண்டவை என்றும் சொன்னார் மகேந்திரன். தாமரைச்செல்வியின் பெரும்பாலான கதை களை விரும்பிப் படித்தார் மகேந்திரன். மட்டுமல்ல, ஈழத்துச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பலற்றையும் படித்திருக்கிறார் அவர். தாமரைச்செல்வியின் மேலும் சில கதைகளைப் படமாக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்குண்டு.

வாழ்க்கையின் அடிப்படைகளை இலக்கியமாக் கும்போது அந்த அடிப்படைகளின் தர்மங்களை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுகின்றவர் தாமரைச்செல்வி. ஆனால், இதை அவர் எங்கும் சொன்னதுமில்லை பிரகடனப்படுத்தியதுமில்லை. அவருடனும் அவருடைய குடும்பத்தினருடனும் அறிமுகமாகத் தொடங்கியபின்னர் இதனை அவதானித்திருக்கிறேன். எதிலும் பிரிந்து நிற்பதுமில்லை. எதிலும் முழுமை யாகத் தோய்ந்து விடுவதுமில்லை என்ற ஒரு இடை நிலை அணுகுமுறை தாமரைச்செல்வியினுடையது. ஒரு படைப்பாளி கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறை இது என்பதைப் பின்னர் அதைப் புரிந்து கொண்டேன். கோட்பாடுகள் நிறம்மாறி, அமைப்புகள் ஒளி மங்கிப்போனாலும் என்றும் பிரகாசம் குறையாத ஒரு நட்சத்திரமாக இருக்கக் கூடிய அணுகுமுறை இது. அதற்காக இதைப் பட்டும் படாதிருத்தல் என்று அர்த்தப் படுத்திவிடமுடியாது. காலத்தில் பின்தங்கி விடாத நிலை இது. இத்தகைய நிலைதான் இலக்கியத்தின் அடிப்படையாகவும் இருக்கமுடியும். உலகின் மாபெரும் இலக்கியங்களின் உள்ளோட்டம் அல்லது அடிப்படை இதுவாகத்தானிருக்கிறது. என்றபடியால்தான் அவை காலத்தால் பின்னகர்த்த முடியாதபடிக்கு இயற் கையைப் போல என்றும் புதுமை குன்றாமலும் நிலை பெயராமலும் இருக்கின்றன.

இதுவரையில் சிறுகதைத் தொகுதிகளும் நாவல்களுமாக ஒன்பது புத்தகங்கள் வரையில் எழுதியுள்ள தாமரைச்செல்வியின் எழுத்துகள் நம் சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா என்று நம்மைக் கேட்கவைக்கினறன. ஒன்றை யொன்று இடையீடு செய்யும் வகையில் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதாக இவற்றைப் பின்னும் கலையைச் செய்து கொண்டிருக்கிறார் தாமரைச்செல்வி. இனி வரும் நாட்களிலும் அவர் யதார்த்தவாதத்தில் இன்னும் செழுமையான கதைகளை எழுதக்கூடும் என்றே நம்பகின்றேன். அவருடைய மனது நிரம்ப சொல்ல வேண்டிய கதைகளிருக்கின்றன. இப்போது அந்தக் கதைகளை எழுதுவதற்குப்பதிலாக அவர் தன்னளவில் தனக்கு வசப்பட்ட கனிவின்படி உதவும் பணிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வழமையைப் போலவே எந்த அமைப்புகளையும் எந்த அணிகளையும் சாராமல், தன்னளவில் உதவிக் கொண்டிருக்கிறார், பாதிக்கப்பட்ட சனங்களுக்கு. இதிலும் அந்தக் கூட்டுக் குடும்பத்தின் அம்சமே உண்டு. ஆக, இனி வரும் அவருடைய கதைகளும் இந்தக் கனிவினதும் அதைக் கோரும் நிலையினதும் வெளிப்பாடுகளாகவே இருக்கக்கூடும். எப்படியோ சில நிறங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுத்தான் விடுகின்றன. சிலருக்கு கடுமையான நிறங்கள். சிலருக்கு மென்நிறங்கள். தாமரைச்செல்வியின் நிறம் மென்நிறமாகவே இருக்கிறது. அது பசிய மென்நிறம்.

நன்றி: எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010 http://eathuvarai.wordpress.com

•Last Updated on ••Wednesday•, 25 •April• 2012 17:01••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

கட்டுரைகள்: கடந்தவை

கடந்தவை 1

கடந்தவை 2

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.022 seconds, 2.38 MB
Application afterRoute: 0.027 seconds, 3.13 MB
Application afterDispatch: 0.066 seconds, 5.79 MB
Application afterRender: 0.163 seconds, 6.83 MB

•Memory Usage•

7229576

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '46v7vujk5pti4fgmlefkq4u613'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719968898' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '46v7vujk5pti4fgmlefkq4u613'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719969798',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:5;s:19:\"session.timer.start\";i:1719969761;s:18:\"session.timer.last\";i:1719969791;s:17:\"session.timer.now\";i:1719969792;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:19:\"com_mailto.formtime\";i:1719969771;s:13:\"session.token\";s:32:\"be192a8e43f8c87a696533c40b360817\";s:16:\"com_mailto.links\";a:2:{s:40:\"52783cb4d169cdce8513b0da5f4e4a4d86865b93\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3677:2016-12-08-03-21-38&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46\";s:6:\"expiry\";i:1719969791;}s:40:\"24bbe62fe45b0b6fa40a73efd872cd53a1c69d0e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:122:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6378:-a-q-&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19\";s:6:\"expiry\";i:1719969792;}}}'
      WHERE session_id='46v7vujk5pti4fgmlefkq4u613'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 19)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 753
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:23:19' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:23:19' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='753'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 2
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-03 01:23:19' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-03 01:23:19' )
      ORDER BY a.created DESC
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 19 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 19
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 12
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:23:19' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:23:19' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

– கருணாகரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

– கருணாகரன் -=– கருணாகரன் -