- எழுபதுகளில் இலங்கை வானொலியில் தன் இலக்கிய பயணத்தை ஆரம்பித்துப்பின் பத்திரிகை, சஞ்சிகை எனத் தன் பயணத்தை விரிவு படுத்தியவர் எழுத்தாளர் தமிழ்ப்பிரியா (முத்தையா புஷ்பராணி). இலங்கையில் ஏழாலை , சுன்னாகத்தைச் சேர்ந்தவர். சிந்தாமணி, சுடர், சிரித்திரன், ஈழநாடு , வீரகேசரி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் இவரது படைப்புகள் வெளியாகின. குங்குமம் (தமிழகம்) வெளியிட்ட அக்கரைச்சிறப்பு மலரைத்தயாரித்தவர் இவரென்று எங்கோ வாசித்த நினைவு. அதிலும் இவரது சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. சுடரில் சிறுகதைகளுடன் இவரது நாவலொன்றும் தொடராக வெளியானது. சுடரின் 'சந்திப்பு' பகுதிக்காகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன், எழுத்தாளர் குறமகள் ஆகியோருடன் இவர் நடாத்திய நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. புலம் பெயர்ந்து பாரிசில் வாழ்ந்து வந்த இவரது மறைவுச் செய்தியினை முகநூலில் இவரது நெருங்கிய தோழிகளிலொருவரான எழுத்தாளர் தாமரைச்செல்வி பகிர்ந்திருந்தார். எழுத்தாளர் முல்லை அமுதன் இவர் நினைவாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்குக் கட்டுரையொன்றினை அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். - பதிவுகள் -
உலகம் கைகளுக்குள் வந்தமை ஆச்சரியம் தான். வாழ்வில் பலரைச் சந்திக்கமுடியாமலேயே போய்விடுமோ என்கிற ஆதங்கம் மனதில் எழுந்துகொண்டே இருக்கும்.சிலசமயம் எல்லாம் கைகூடி வந்திருக்கும்.பலதடவைகள் கைகளுக்கு எட்டாதவையாகவே காலம் முடிந்திருக்கும். ஊரில் ஒவ்வொரு மாலைப்பொழுதுகளையும் ஆக்கிரமித்திருந்த பல நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் சிறு நாடகங்கள்,தொடர் நாடகங்கள் இவற்றுக்கப்பால் என் போன்றவர்களை அதிகம் வசீகரித்த நிகழ்வு எதுவெனில் 'இசையும் கதையும்' நிகழ்ச்சியாகும்.கதைக்கேற்ற பாடல்களுடன் மனதுள் இறங்கி நாளெல்லாம் அசைபோடவைக்கும்.பல நாட்கள் அவை பற்றியே பேசுவோம்.நண்பர்களின் வீட்டில் அல்லது யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவிலோ உட்கார்ந்து கேட்போம்.பொழுது போவதே தெரியாது..வேறு தெரிவுகளும் இல்லாத நாட்கள்.
அதே சமயம் யார் என்கிற தேடலும் நண்பர்களிடையே எழும். அந்த வேளையில் தான் ஈழநாடு, சுடர், கலாவல்லி, இலங்கை வானொலி, வீரகேசரி, சிந்தாமணி, அமிர்த கங்கை, மல்லிகை, சிரித்திரன் , குங்குமம்(இந்தியா), இதயம் பேசுகிறது போன்ற இதழ்களில் எழுதிய கதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்படப் பலரும் வாசிக்கும் படைப்பாளராக நாம் கண்டோம்.சுடரில் வெளிவந்த 'வீணையில் எழும் ராகங்கள்' மறக்கமுடியாத தொடராகும். அதே போலத் தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் எழுதத்தொடங்கினார். அப்போது 'நெஞ்சில் வரைந்த ஓவியம்', 'உண்மை அன்பிற்கு ஊறு ஏற்படாது', 'இறைவன் கொடுத்த வரம்' போன்ற தொடர்களை எழுதி எம்மை வியப்பில் ஆழ்த்தினார்.நாமும் எழுதத்தொடங்கிய காலம். அதே சமயம் கவிதைகள், கட்டுரைகள் எனவும் எழுதினார். குங்குமம் இலங்கைச் சிறப்பிதழுக்குத் தொகுப்பாசிரியராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வேளையில் தான் தமிழ்ப்பிரியாவின்(புஸ்பராணி இளங்கோவன்) ரசனைமிக்க பாடல்களுடன் இசையும் கதையும் கேட்போம்.அடுத்து எப்போது ஒலிபரப்பும் என்றும் காத்திருப்போம்.
அக் காலங்களில் ஏழாலையிலிருந்து இசையும் கதையும் பகுதிக்கு இருவர் எழுதினார்கள்.நமக்குள் ஒரு குழப்பம் .இருவரா அல்லது இருவரும் ஒருவரா?இல்லையென இருவரும் ஒருவரல்ல என்கிற பதில் வந்தது.மற்றவர் எழாலை ஜனகமகள் சிவஞானம்.ஆவார். நாலைந்து பேர்கள் இணைந்து எழுதும் கதைகளும் பத்திரிகைகளில் வந்தன. மத்தாப்பு என்கிற தொடர் பிரபலம்.
அமரர்.சி முத்தையா அவர்களுக்கும் பரமேசுவரிக்கும் அவர்களுக்கும் மகளாகப் பிறந்தவர் திருமதி.தமிழ்ப்பிரியா இளங்கோவன் அவர்கள் அறிஞர்கள் சூழ்ந்த ஏழாலை (சுன்னாகம்) எனும் கிராமத்தில் பிறந்த தமிழ்ப்பிரியா ஏழாலை சன்மார்க்க வித்தியாசாலையிலும், மல்லாகம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். யாழ்ப்பாணத்தில் தனியார் கணக்குப் பரிசோதகர் காரியாலயம் ஒன்றில் கணக்குப் பதிவாளராகவும் பணிபுரிந்தார்.
காலம் பலரை நகர்த்திச் சென்றிருக்கிறது. நம்மைப் போலவே புலம்பெயர்ந்து பிரான்ஸிற்கு வந்தார். அங்கும் தன் இலக்கிய முயற்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. .தொடர்ந்து எழுதினார். அவை ஈழநாடு(பிரான்ஸ்) ஈழமுரசு (பாரிஸ்) ஐ பி சி வானொலி,ரி.ரி.என் தொலைக்காட்சி என அச்சு ஒலி,ஒளி ஊடகங்களில் பிரசுரமாகியும், ஒலி/ஒளிபரப்பாகியும் வந்தன. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் தன் படைப்புக்கள் நூலாக்கிவிடவேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டார். சிறுகதைத் தொகுக்கும் முயற்சியில் சில நண்பர்கள் ஊடாக சிலகதைகளைத் தேடிக்கொடுத்தேன். அவைகளைத் தொகுத்து கொழும்பு மீரா பதிப்பகம் ஊடாக 'காம்பு ஒடிந்த மலர்கள்','ஒரு நியாயம் விழிக்கிறது' என இரண்டு சிறுகதைத் தொகுதிகளாகத் தந்தார். இன்னும் தொகுக்க முடியாமல் / கிடைக்காமல் போன கதைகளுடன் முழுச் சிறுகதைகளையும் தொகுத்து வெளியிடவும், கவிதைகளையும், குறுநாவல்களையும் வெளியிடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். பலதடவைகள் கதைக்கும் போது அந்த ஆர்வமும் வெளிப்படும். இயற்கை அழிவுகளாலும், யுத்தம்,இடப்பெயர்வுகளாலும் அழிந்துபோன செல்வங்களில் ஒரு படைப்பாளனுக்கு தன்படைப்புக்களின் இழப்பே அதிக வலிதரும் நிகழ்வாகும்.பல படைப்புக்கள் கிடைக்கவில்லை என்ற சோகமும் உண்டு.
இயல்பாகவே இரக்கமனம் கொண்டவர் தமிழ்ப்பிரியா.ஒவ்வொரு காலகட்டத்திலும் தாயகத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்காக தன்னாலான உதவிகளைச் செய்வதில் முன்னின்றார்.பாரிஸ் நகரில் நடைபெறும் நண்பர்களின் நூல்வெளியீடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டது.தொலைபேசியிலும் அவ்வப்போது உலகநடப்புக்கள்,இலக்கியம்,தாயகம் பற்றிய திட்டங்கள் எல்லாம் பேசுவோம்.
தான் காணும் அனுபவங்களைக் கதைகளாக்கி அவற்றின் மூலம் தீர்வுகள் சொல்லிவிடலாமா என்றும் சிந்திப்பார்.நம்பிக்கையுடன் விரக்தி,வாழ்வின் மீதான நோவுகள்,யுத்தம் பற்றிய வலிகள் அவரின் பேச்சில் எப்போதும் இருக்கும்..நம்மைப் போல ஊர் போய்விடவேண்டும் என்கிற ஆதங்கம் அவரிடமும் இருந்தது.தந்து ஊருக்கு (ஏழாலை மேற்கு)ஏதாவது செய்யவேண்டும் என்றும்,படைப்பாளருக்கான தனது பங்களிப்பைச் செய்யவேண்டும் என்பதிலான உறுதியையும் காணமுடிந்தது.என்னுடனோ,எனது துணைவியாருடனோ பேசும்போது அவரிடமிருந்து வரும் கனிவு,இதம்,சுவாரஸ்யம் அதனூடே தெளிவான வார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்கிறது. அவரது இரண்டு சிறுகதைகளின் தொகுப்பிற்கு அறிமுகம்,விமர்சனம் எழுதியிருந்தேன்.அவற்றை மீள எடுத்து வாசிக்கவேண்டும் போலிருந்தது. காலம் கொடுமையானது..தன்பாட்டில் கடந்துபோய்விடுகிறது.ஆனால் நமக்குத் தான் தீராத சோகத்தையும் தந்துவிட்டுப் போகிறது.
நாட்கள் நகர,நகர கனவுகளின் மீதான நீட்சி அதிகரித்தவண்ணமே இருக்கும். மாறாக வாழ்க்கை தன் கட்டுப்பாட்டிலேயே நம்மை வைத்திருக்க முனைகிறது.இங்குதான் நமக்கான வாழ்வுக்கும்,கனவுக்குமான போட்டியே.சில சமயங்களில் கனவு வென்றுவிடுகிறது. பலதடவைகள் வாழ்க்கை வென்றுவிடுக்கிறது.கனவுகள் அந்தரத்திலேயே எப்போதும் போலத் தொங்கிவிடுகிறது.எந்த விக்கிரமாதித்தனும் மீள மீட்டுவரமுடியாதபடி எல்லாம் முடிந்திருக்கும். இங்கும் நம் கண்முன்னால் நிறையக் கனவுகளுடன் வாழ்ந்த ஒரு கனிவான மனுஷியை (07/05/2020)இழந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது காலம் கொடியது என்றே தோன்றுகிறது. அவரின் முழுத் தொகுப்புக்களையும் (கவிதை,சிறுகதை,குறுநாவல்கள்) கொண்டுவரல் வேண்டும். அதுவே அவருக்காக நாம் செய்யும் பணியாகும்.ஒரு தலைமுறை எழுத்தாளரை நாம் மறந்துவிடுதல் தகாது.பலரை இழந்துவிட்டோம். இரங்கல் அல்லது பிரார்த்தனை என்ற வட்டத்திற்குள் நின்றுவிடாத நட்பின் எல்லைகள் நமக்குள் விரிவடைய வேண்டும். அப்போதுதான் நம் சமூகத்தில் வாழ்ந்த மனித சிந்தனையாளர்களை,படைப்பாளர்களை மனதிலிருத்தமுடியும். காலத்திற்காக நாம் காத்திருக்காது காலம் கடந்தும் நினைவுகொள்வதற்கான பணிகளைச் செயல்படுத்துவோமெனில் தமிழ்பிரியா போன்றவர்களுக்கு நாம் செய்யும் சிறப்பான அஞ்சலியாகும்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
07/05/2020
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems