- வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பூங்காவனம்' சஞ்சிகையில் வெளியான அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஏ.இக்பாலின் 'இலக்கிய அனுபவ அலசல்' தொடரின் ஓர் அலசலை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பி வைத்த வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு நன்றி. -பதிவுகள் -
இலக்கிய ஈடுபாடு பல்திறப்பட்ட நுணுக்கமான பார்வைக்கு வழிவகுக்கும். ஓர் இலக்கியப் படைப்பின் இயல்புகளை இனங்கண்டு அதனை விவரிக்கவும் விளக்கவும் இலக்கிய ஈடுபாடு ஏற்படுத்தும். வாசிக்கும் வல்லமையால் மனதை உறுத்திய குறிப்புக்களை எப்போதோ எழுதி வைத்திருந்தேன். அவற்றை இப்போது அலசும்போது புதுமையான எண்ணங்கள் எழுவதால் சிலவற்றை இங்கே தருகிறேன்.
01
1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி தினகரனில் ''மனக்கண்'' என்னும் சிறந்த நாவல் ஒன்றை எழுதினார். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு வாசகன் பெறும் தகவல்கள் அளப்பரியன. அவற்றை அட்டவணை செய்து பார்த்தல் அவசியம்.
''உயிருடனிருக்கும்போது கண்தானம் சட்டப்படி செய்ய முடியாது'' என்ற உண்மை, வைத்திய சம்பந்தமான நூல் பிரான்ஸ் டாக்டர் பீஸரெரோலன்ட் என்பவர் எழுதிய புத்தகம், வைத்திய நுணுக்கங்கள், கிரேக்க நாடகாசிரியரான செபாக்கிளிஸ் எழுதிய ஈடிபஸ் ரெக்ஸ் நாடகம், துஷ்யந்தன் சகுந்தலை காதல், துட்டகைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும் பஞ்சகுலப் பெண் அசோகமாலாவுக்கும் ஏற்பட்ட காதல், இளவரசி மார்க்கிரட் காதல், அரிச்சந்திர புராணம், காந்திமகான் வாழ்க்கையை மாற்றிய காரணத்துக்கான நிகழ்வு, இளவரசர் அலிகான் ரீட்டா ஹேவொர்த் அந்யோன்யம், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியத், அறபு நாட்டுக் கதை லைலா மஜ்னு, பெர்னாட்ஷா கூற்றுக்கள், புறநானுற்றுச் செய்யுள்கள், இராமாயனக் கதை, நளன் தமயந்தி தூது, சிலப்பதிகார இந்திரத்திரு விழா, அலெக்சாந்தர் கோடியல் சந்திப்பு, சுவாமி விபுலானந்தர் செய்யுள், வள்ளுவர் குறள்கள், பழமொழிகள், வழக்குச் சொற்றொடர்கள், நீட்சேயின் தத்துவ விளக்கம், சத்தியவான் சாவித்திரி கதை, ஆங்கிலக் கவிஞன் மில்டனின் கவிதைகள், பிரசித்தி பெற்ற குருடர்கள் வரிசை:- துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன், மாளவ தேசத்து சத்தியவானின் தந்தை, தேபஸ் மன்னன் ஈடிபஸ், யாழ்ப்பாடி, ஆங்கிலப் பெருங்கவிஞன் மில்டன், சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கண்ணைத் தானே குத்திக்கொண்ட வைஷ்ணவப் பத்தன் பில்வமங்கள் கதை, சிந்தகன் என்னும் மேலைத்தேயச் சிற்பத் தோற்றம், பட்டினத்தார் பாடல்கள், இன்னோரன்னவைகள் அந்நாவலில் விரவிக் கிடப்பதைப் படிக்க முடியும்.
02
தன் மனைவியரின் கற்பற்ற தன்மையைக் கண்ட மன்னன், தினமும் ஒரு கன்னிப் பெண்ணை மணந்து மறுநாள் அவளைக் கொன்றுவிடுகிறான். கன்னிப் பெண்களைத் தேடிக்கொடுப்பவர் மந்திரிதான். கன்னிப் பெண்கள் தேடுவது கஷ்டமான நிலை ஏற்படும்போது, தந்தையின் அவதியைக் கண்ட மந்திரி மகள், மன்னனை மணக்க முன் செல்கிறாள். மன்னனைக் கவர்ந்து இரவில் ஒரு கதையைச் சொல்லி சுவாரஸ்யமான இடத்தில் அதைக் காலையானதும் நிறுத்திவிடுகின்றாள். இவ்வாறு மன்னன் கவனம் கதையின் பக்கம் இருக்குமாறு செய்து ஆயிரத்து ஓராம் இரவு கழிந்த பின் மன்னனின் மனமே மாறிவிடுகிறது. இக்கதையை அறபியில் ஷஷஅல்புலைலா வலைலா|| என்பர். அதாவது ''ஆயிரம் இரவும் மேலும் ஓர் இரவும்'' என்பதாகும். இதிலுள்ள கதைகள் இருநூறுதான்.
03
''மணிக்கொடி காலம் தமிழ் இலக்கியத்தில் புதுமைகள் பூத்த காலம், புதுவகை முயற்சிகள் முகிழ்ந்த காலம், பல்வகை இலக்கியங்கள் புதிய வடிவம் பெற்று உருக்கொண்ட காலம், வரலாற்றில் ஒரு திருப்பு மையம்'' என்று தமிழ் அறிந்தோர் விளக்கும் பத்திரிகைதான் மணிக்கொடி.
உலக இலக்கியத்தில் வேகமாக வளர்ந்து வந்த சிறுகதைகளுக்குச் சமதையாகத் தமிழ் சிறுகதையும் வளர வேண்டுமென்று ஆழமான சிந்தனையில் ''மணிக்கொடி'' எழுத்தாளர்கள் இயக்க ரீதியாக எழுந்தனர். அதன் விளைவால் மணிக்கொடி எழுத்தாளர்களான கே. சீனிவாசன், வ.ரா. ராஜகோபால், பி.எஸ். ராமையா, ந. பிச்சமூர்த்தி, பெ.கொ. சுந்தரராஜன், புதுமைப் பித்தன், கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, இளங்கோவன், சிதம்பர சுப்ரமணியம், பி.எம். கண்ணன், மௌனி போன்றோர் தமிழ் நாட்டின் மணிக்கொடிக் காலத்தில் கதாநாயகர்களாகும் போது, இலங்கையிலும் அதன் தாக்கம் ஆகர்ஷித்ததன் விளைவாக சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன், இலங்கையர் கோன், ந. சிவஞானசுந்தரம் ஆகியோரும் சேர்ந்து அவ்விடத்தைப் பெறுகிறார்கள். இவர்களின் கதைகளில் அனேகம் கலைத்துவமுடையன. இளைய பரம்பரையினர் அவற்றைத் தேடிப்படித்தல் இலக்கிய பலத்தைக் கொடுக்கும்.
04
103 வருடங்களாக லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ''டிட்பிட்ஸ்'' என்னும் பத்திரிகை 1984 ஆம் ஆண்டு நின்றுவிட்டது. அதற்கான காரணம்: வேலை நிறுத்தம்தான். வாரம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் இதழ்கள் விற்பனையான பத்திரிகை இது. இப்பத்திரிகையின் துணுக்கு வடிவம் எல்லோரையும் கவர்ந்துவிடும். இந்த வடிவத்தைப் பின்பற்றி முன்பு தினகரனில் உதவி ஆசிரியராகயிருந்த ஸெயினுல் ஹுசைன் சுடச்சுடத் துணுக்குகளை சுவாரஸ்யமாகத் தருவார். வாசகர்கள் விழுந்தடித்து அதனையே முன்பு வாசித்துவிடுவர்.
05
ஆர்.எம். நௌஸாத் (என்.ஏ. தீரன்) என்பவரை ஆசிரியராகக் கொண்டு ''தூது'' என்னும் கலைத்துவ இலக்கிய ஏடொன்று சாய்ந்தமருதுவிலிருந்து வெளிவந்தது. சிந்தனைக்கு முதலிடம் கொடுக்கும் இச்சஞ்சிகை புதிய பரிமாணங்களையும், நவீன பரிணாமங்களையும் எதிர்பார்க்கின்றது. தரமான இலக்கியப் படைப்புக்கள், விமர்சனங்கள் கிடைக்காத காரணத்தால், கிடைத்தவை தரமில்லாததால், தமிழ் நாட்டில் ஷஷநடை|| என்றும் ஏட்டை நிறுத்திவிட்டனர். அவ்விதம் தூது நின்றுவிடக்கூடாது. இலக்கியவாதிகள் கைகொடுத்தல் அவசியம். ஆனால் ''தூது'' நின்றுவிட்டது.
06
கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றுள்ள படம்தான் ஷஷதபரனா கதா|| வாகும். இப்படம் ஓய்வு பெற்ற அரச ஊழியன் பென்ஷன் தொகையைப் பெறுவதற்குப் படும்பாட்டையே சுட்டிக் காட்டுகின்றது. இப்படத்தைத் தயாரித்து நெறிப்படுத்திய விருது பெற்ற கிரிஷ்காஸரவல்லி என்பவரைப் பாராட்டிய கர்நாடக அசை;சர் வீரண்ணா, ஷஷபென்ஷன் கிராஜுவிடி, ப்ரவிடன் பண்ட் போன்றவற்றை அரச ஊழியர்களுக்கு யதார்த்தத்தில் ஓய்வுபெறும் நாளன்றே கொடுக்க ஏற்பாடு செய்வேன்|| என உறுதிமொழி கொடுத்தார். இது ஒரு வெற்றிப் படம்தான்.
07
மகாகவி மில்டன் தமது பதினாறாவது வயதில் ஆங்கில மொழியில் அழகு நடையில் அரிய கருத்துடைய எளிய கவிதைகளை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரது கல்லூரி ஆசிரியர்களே அவரது கவிதைகளைப் படித்து அவருடன் மரியாதையாகப் பழகினார். மில்டனுக்கு இது பிடிக்காததால் ஆசிரியர்களிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். கேம்பிரிஜ்ஜில் கற்கும் போதே அவரது கலைத்துவ மிக்க கவிதைகளால் அவர் புகழ் மேம்பாடடைந்தது.
இங்கிலாந்தில் முதலாவது சார்லஸ் மன்னன் ஆட்சியை விரும்பாத மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சியின் அவசியத்தையும் மன்னனின் குறைகளையும் அறிந்த மில்டன் ஆவேசம் நிறைந்த அழகிய கவிதைகளால் மக்களின் ஆர்வத்தைத் தூண்டினார். புரட்சியால் முடியாட்சி கவிழ்ந்து, புதிய அரசாங்கத்தில் பொறுப்புள்ள பதவி மில்டனுக்குக் கிடைத்தது. பத்தாண்டு காலம் மில்டன் க்ரம்வெல் ஆட்சியில் ஆஸ்தான கவிஞராக விளங்கினார். பதவியின் பெருமையில் மில்டன் ஓய்ந்திருக்கவில்லை. ஆடம்பர வாழ்வை அறவே வெறுக்கும் இயக்கமொன்றை ஆரம்பித்தார். மன்னர்களிடம் அபிமானமுடைய ஸ்டுவட் பரம்பரையினர் இவ்வியக்கத்தை எதிர்த்துக் கேலி செய்தனர். இவர்களது எதிர்ப்புகளுக்கெல்லாம் எளிமை வாழ்வின் மேன்மையைக் கவிதை மூலம் எழுதி வெளியிட்டு வெற்றி கண்டார்.
நாற்பத்தி மூன்றாவது வயதில் மில்டன் தன் பார்வையை இழந்துவிட்டார். ஷக்ரம்சிவல்| இறந்ததும் குடியாட்சி முடிவுற்றது. முதலாம் சார்லஸின் மகன்
பட்டத்துக்கு வர முயல்வதை மில்டன் கடுமையாக எதிர்த்தார். ஆனால் இரண்டாம் சார்லஸாக முதலாம் சார்லஸின் மகன் ஆட்சியைப் பெற்றான். இதனால் மில்டனின் கவிதைக்கு ஆதரவளித்தவர்கள் சிறைப்பட்டனர். கொடுமைக்குள்ளானார்கள். தூக்கிலுமிடப்பட்டனர். அரசாங்கம் மில்டனின் உயிருக்கே உலை வைக்க இருந்த காலம் அவர் லண்டனைவிட்டு நீங்கி எட்டாண்டு வாழ்ந்தார். இத்துன்பச் சூழ்நிலையிலும் அவர் எழுத்தைப் பலமாக்கினார். உலகம் வியக்கும் ஷஷஇழந்த சுவர்க்கம் - Pயுசுயுனுஐளுநு டுழுளுவு|| காவியத்தைப் படைத்து இன்பங் கண்டார்.
மில்டன் அரசாங்க ஆதரவை இழந்து, கண் பார்வையை இழந்து, மனைவியை இழந்து நின்ற போதும் நம்பிக்கையை இழக்காது உறுதியாகப் பற்றி நின்றார். இந்த நெருக்கடிக் காலத்தே ''இழந்த சுவர்க்கம்'' காவியத்தை அடுத்து, ஷஷமீண்ட சுவர்க்கம்||, ''சாம்சன்-டிலைலா'' ஆகிய உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களைப் படைத்தார்.
1974 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் திகதி ஒரு கண்ணாடி மைக்கூட்டையும், இறகால் உருவான ஓர் எழுதுகோலையும் பிரிட்டிஷ் மியூஸியம் அறுநூறு பவுண் விலை கொடுத்து வாங்கி தம் கருவூலத்தில் பார்வைப் பொருளாகப் பத்திரப்படுத்தியது. இவ்விரு பொருட்களுக்கு உரிமையாளர் 1674 ஆம் வருடம் நவம்பர் 08 ஆம் திகதி மறைந்த மகாகவி மில்டன் அவர்களேதான். இந்த மைக்கூடும் எழுதுகோலும் சிருஷ்டித்த இலக்கியங்களின் பெருமைதான் இன்னும் பிரிட்டிஷ் மக்கள் இவற்றைப் பாதுகாத்துப் பார்வையிடுகின்றனர்.
மகாகவி மில்டனின் ''இழந்த சுவர்க்கம் - PARADISE LOST'' உலக காவியத்தின் கதாநாயகன் ''சாத்தான்'' ஆகும். இதே போல் ''இபுலீஸ்'' என்னும் சாத்தானைக் கதாநாயகனாக்கி, அழுத்கமயைச் சேர்ந்த ஆமீத் புலவர் என்பவர் 'இபுலீசு படைப்போர்' என்னும் காவியத்தை வெளியாக்கியிருக்கின்றார். அந்த நூலுடைய நாயகன் தன் வரலாறு கூறும் கவிதைகளைத் தருகின்றேன்.
''அந்தனர்வாக்குணர்ந்தழ் காமநன்கைரில்வாழும்
வெந்துறைமரைக்கார்கோத்ர வழிபினிற்கணக்கர்மீறான்
சுந்தரப்புதல்வரான செய்குலெவ்வை மரைக்கார்
சந்ததிஅப்துர்ரகுமான் லெவ்வையின்றோன்றலானேன்
மதினாவைநாடியெங்கண் முகம்மதரெழுந்துசென்ற
வதிசயவருடமோரா யிரத்தின்மேன்முன்னூறாமாண்
டதனிலேமுகர்ரமாறாந் திகதிஜும் ஆவின்பின்னர்
வதுளையிற்கத்தீபுகாமி தென்பவன்பாடினானே.''
இவ்விதம் வாசித்த அநுபவத்தில் அறுநூறுக்கு மேற்பட்ட துணுக்குகளைப் பல வருடங்களுக்கு முன்னே எழுதி வைத்தவற்றில் சிலவற்றை உங்கள் முன் தந்துள்ளேன். வாசித்துப் பாருங்கள்!!!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems