அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.
பொதுவாகப் பெண்டிர் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர். இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையாகவும் கீழ்நிலையாகவும் உள்ளோரிடத்துக் காணலாம். உயர்குடியில் பிறந்த பெண்டிர் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் ஏவலர்களையும் வைத்துள்ளனர். இது இரு வீட்டாரின் இசைவால் நிகழ்ந்த திருமண வாழ்விற்கு ஒத்தது. ஆனால் இரு வீட்டாரின் இசைவில்லாமல் நிகழும் களவு மணப்பெண்டிருக்கு அடுக்களைதான் வாழ்க்கை. அதனையே அகவிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அதனைக் குறுந்தொகைப் பாடல் (167) குறிப்பிடுகின்றது.
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா துடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தாம்துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே – கூடலூர் கிழார்
இப்பாடல் உயர்குடியில் பிறந்தபெண் ஒருவள் தன் காதல்கேள்வனுக்கு உணவு சமைக்கும் திறனை வெளிப்படுத்துவதாக மறைமலையடிகள் குறிப்பிடும் கருத்து சுட்டுகின்றது.
தன் கணவன் மேலுள்ள காதன் மிகுதியினால் ஏவலரும் பிறருஞ் சமையல் செய்வதற்கு ஒருப்படாது தானே தன் மெல்லிய சிவந்த விரல்களால் தயிரைப் பிசைதலும், கணவன் பசித்திருப்பானே என்னும் நினைவால் விரைந்து சமையல் செய்யும்போது இடுப்பிற்கட்டிய உயர்ந்த ஆடை கழலவும் பிசைந்த கையினைக் கழுவி விட்டு உடுப்பதற்கும் காலம் நீண்டு அப்புளிப்பாகின் பதங் கெடுமென உணர்ந்து அக் கையுடனேயே அவ்வுயர்ந்த ஆடையினைக் கட்டிக் கொள்ளுதலும், அங்ஙனம் பிசைந்து திருத்திய புளிப்பாகினைத் தாளிக்கும் போதுமேல் எழும் புகை தன் குவளைப்பூவன்ன கண்ணிற்படவும் அப்புறந்திரும்பினால் அது பதங் கெடுமே என்று முகந்திரும்பாமல் அதனின் விரைந்து துழாவலும் அங்ஙனமெல்லாந் தன் வருத்தத்தினையும் பாராது சமைத்த சுவைமிக்க அப்புளிப்பாகினைக் கணவன் மகிழ்ந்துண்ணல் கண்டு தன் மகிழ்ச்சி வெளியே தெரியாமல் அவள் முகம் மலர்ந்து காட்டுதலும், இயற்கையே தனக்குள்ள நாணத்தால் அவள் முகஞ் சிறிது கவிழ்ந்து நிற்க அவளது ஒளிமிக்க நெற்றியே அம்மகிழ்ச்சிக் குறிப்புப் புலனாக முன்விளங்கித் தோன்றுதலுஞ் சில சொல்லில் மிக விளங்கக்கூறிய நுண்மை பெரிதும் வியக்கற்பால தொன்றாம் (முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, 2007:36 – 37).
இங்ஙனமாகத் சங்ககாலத் தலைவி (தமிழ்) தன் காதல் கேள்வனுக்கு உணவு சமைத்து இன்புற்றாள். சங்க இலக்கியத்திற்கு இணையாகக் கருதப்பெறும் பிராகிருதப் பேரிலக்கியம் காதா சப்த சதி (1981:முன்னுரை). இந்நூலும் மக்களின் (அந்நூல் எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த) அக உணர்வுகளை அழகுற விளக்குகின்றது. அதிலும் மணவாழ்க்கையை ஏற்றுக் கொண்ட பெண்டிரின் வாழ்வைச் சுட்டும் பாடல்கள் மிகுதியாக உள. இவற்றுள் அப்பெண்டிர் அடுக்களை உணவு சமைக்கும் நிகழ்வுகளைச் சுட்டும் பாடல்களும் உள. அப்பாடல்களுள் மு. கு. ஜகந்நாதராஜா மொழியாக்கத்தில் இடம்பெறும் பன்னிரண்டாம் பாடல் தன் கணவனுக்கு உணவு சமைக்கும் பாங்கை விளக்குகின்றது. அவள் சமைக்கும் காலத்து கை சுவற்றில் படுகின்றது. அச்சுவற்றில் படிந்திருந்த புகைப்படலத்தின் கருநிறம் அவளின் கையில் ஒட்டுகின்றது. உணவு சமைக்கும் நோக்கத்திலிருந்த அவள் தன் கையில் புகைப்படலம் ஒட்டியிருந்தமையை மறந்து முகத்தில் வழிந்தோடும் வியர்வையைத் துடைக்க, அப்புகைப்படல அச்சு முகத்தில் ஒட்டி விடுகின்றது. அதனை அறியாது அடுக்களையை விட்டு கணவனிருக்கும் இடத்திற்கு வருகின்றாள். அவள் கணவன் அதனைக் கண்ணுற்று, அவள் முகத்திலிருக்கும் புகைப்படல அச்சினை நிலவிலிருக்கும் கருநிற மருவிற்கு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றான் எனும் கருத்தைக் குறிப்பிடுகின்றது.
அடுக்களைப் பணியாள் அழுக்கடைந் திட்ட
னபடி கையால் தைவந் திடலால்
மடந்தை முகந்தான் மறுவமர் மதியெனக்
கிடந்தது கண்டே கேள்வன் மகிழ்ந்தான் – காலன்
இப்பாடல் கருத்துடன் மேற்சுட்டிய குறுந்தொகைப் பாடல் கருத்தை ஒப்பு வைத்து நோக்கினால் பின்வரும் கருத்துக்களை ஊகித்தறியலாம்.
* சூழல் மாறுபடுதல். அதாவது, சங்ககாலத் தலைவி (தமிழ்) முளிதயிர் பிசைந்து புளிப்பாகிட்டுத் தயிர்க்குழம்பு சமைக்கின்றாள் என்பதால் முல்லைநிலச் சூழலையும், பிராகிருதத் தலைவி உணவு சமைக்கும் பொழுது அங்குள்ள சுவற்றில் தன் கைப்பட, அச்சுவற்றில் இருக்கும் கருநிற மை ஒட்டிக் கொள்கின்றது என்பதால் ஏழ்மையான சூழலையும் காட்டுவதேயாம்.
* பாராட்டுந் தன்மை நிலவுதல். தலைவியானவள் தான் துன்பப்பட்டாலும் கணவனுக்கு நல்லுணவு படைக்க வேண்டும் எனும் நோக்கத்தைத் தலைவன் பாராட்டுவதேயாம்.
* அங்ஙனம் பாராட்டுதலில் சிறுவேறுபாடு உண்டு. அஃதியாங்கெனின் சங்ககாலத் தலைவன் (தமிழ்) முதிர்ந்த தயிரைப் பிசைந்த கைகளையும், குய்ப்புகை பட்ட கண்களையும் பாராட்ட, பிராகிருதத் தலைவன் அடுக்களையின் சுவற்றுக் கருநிற மை பட்ட முகத்தைப் பாராட்டுவதேயாம்.
* தமிழில் தலைவியும் பிராகிருதத்தில் தலைவனும் மகிழ்வதாக அவ்விரு பாடல்களும் அமைந்துள்ளன.
* தமிழ்ப் பாடல் செவிலி கூற்றாகவும், பிராகிருதப் பாடல் தோழி கூற்றாகவும் இடம்பெற்றுள்ளன.
* பிற அஃறிணைப் பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுதல். சங்ககாலத் தலைவியின் (தமிழ்) கைகளும் கண்களும் முறையே காந்தள், குவளை மலர்களுக்கும், பிராகிருதத் தலைவியின் முகம் நிலவுக்கும் ஒப்புமைப்படுத்திப் பார்க்கப்பட்டதேயாம்.
* இருமொழிப் புலவர்களும் ஆடவராயிருத்தலிலும், அவர்கள் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைச் சுட்டுவதிலும் ஒருமித்து நிற்றல்.
* தமிழ்ப் பாடல் களவு மணம் செய்தோரின் வாழ்க்கைமுறையைக் குறிப்பிட, பிராகிருதம் பொதுவாக மணம் செய்தோரின் வாழ்வைச் சுட்டுகின்றது.
* காதல் தந்த ஆற்றல். ஒன்று: துன்பத்தை ஏற்கும் தன்மை. மற்றொன்று: பொதுநலம் காட்டுதலும் ஆற்றுப்படுத்தலும். முன்னது, தலைவிக்கும் பின்னது, தலைவனுக்கும் அமைந்துகிடப்பதைக் குறுந்தொகைப் பாடல் காட்டுகின்றது.
* பெண்டிருக்கான தொழில் சமையல் செய்வது என்பது இருமொழிப் புலவர்களிடத்தும் நிலவுதல்.
இங்ஙனம் ஒத்த சிந்தனைகளை இருமொழிக் கவிஞர்களும் பெற்றிருந்தாலும் சிற்சில வேறுபாடுகள் நிலவத்தான் செய்கின்றன என்பதை ஆய்வு முடிவுகள் மூலம் அறியமுடிகின்றது. ஆக, இம்முடிபுகள் பல்வித கருத்தியல்களை முன்வைத்தாலும், அவ்விரு மொழிகளின் பாடல்கள் திருமணம் ஆன பெண்டிர்கள் அடுக்களையில் உணவு சமைக்கும் திறனை மையமிட்டே நிற்கின்றன. எனவே, ஒரு பொது மூலக் கருத்தியலை உருவாக்க இயலும். அது, மணஉறவுப் பெண்டிரின் தொழில் சமையல் என்பதேயாம். அது எவ்வாறு பொருத்தமுடையது என எண்ணத்தோன்றும். காரணம்: சங்ககாலத்தில் திருமண வாழ்க்கையில் பெண்டிர் சமையலை மட்டும்தான் தொழிலாகக் கொண்டனரா எனும் ஐயம் எழும். அதற்கு அப்பெண்டிர் முன்பு (திருமணத்திற்கு முன்பு) எந்த வேலைகளையும் செய்யாமல் இருந்தனர் என்பதே வெளிப்படை. இங்கு மேற்சுட்டிய குறுந்தொகைப் பாடலுக்கு மு.வரதராசன் தரும் கருத்துரையைச் சுட்டிக்காட்டலாம்.
புதுவாழ்க்கை தொடங்கிய இந்த இளம் பெண் நேற்று வரையில் எவ்வாறு வாழ்ந்தாள்? தன் மெல்லிய விரல்கள் காந்தள் மலர்போல் விளங்குமாறு மாசு படாமல் காத்து அழகுக்குக் குறைவு என்று எண்ணும் மனம் இருந்தது. உடுத்திய ஆடை ஒழுங்கு கெடாதவாறு, மாசு படாதவாறு, காக்கும் ஆர்வம் இருந்தது. அழகிய கண்களுக்கு மைதீட்டி அவை குவளை மலர் போல் விளங்குமாறு காக்கும் அழகுணர்ச்சி இருந்தது. தன் அழகைக் காத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, அதை ஒரு கலையாக்கி நாள்தோறும் அழகுபடுத்திக் கொள்வதற்காகச் சில நாழிகை செலவிட்டு வாழ்ந்த இளம்பெண், இன்று புக்கத்தில் எத்தகைய பெருமாறுதல் உற்றாள்! தன் அழகு என்ற தன் முனைப்பு அவள் உள்ளத்தை விட்டு அகன்று, கணவன் மகிழ வேண்டும் என்ற வேட்கையால் தியாக உணர்வு வளர்ந்து விட்டது. ஆகவே மெல்லிய விரல்கள் ‘முளிதயிர்’ பிசைந்தன. தூய ஆடையைத் தயிர் பிசைந்த கைகள் உடுத்தின. தாளிப்புப் புகையில் மையுண்ட கண்கள் மூழ்கின. அன்று அவள் விரும்பியது தன் அழகு அன்று; கணவனின் மகிழ்ச்சியே ஆகும். விரும்பியதைப் பெற்றாள்; அவள் உள்ளம் நிறைந்தது. அந்த நிறைவால் முகத்தில் நுண்ணிய புன்முறுவல் பொலிந்தது (1994:52).
துணைநின்றவை
1. இராகவையங்கார் ரா., 1993, குறுந்தொகை விளக்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
2. சோமசுந்தரனார் பொ.வே., 2007, குறுந்தொகை, கழக வெளியீடு, சென்னை.
3. மணவாளன் அ. அ., 2011, இலக்கிய ஒப்பாய்வு: சங்க இலக்கியம், நியூசெஞ்சுரி புத்தகாலயம், சென்னை.
4. மறைமலையடிகள், 2007, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
5. வரதராசன் மு., 1994, குறுந்தொகைச் செல்வம், பாரி நிலையம், சென்னை.
6. ஜகந்நாதராஜா மு.கு. (மொ. ஆ.), 1981, காதா சப்த சதி, விசுவசாந்தி பதிப்பகம், இராசபாளையம்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems