சிறுகதைக்கான வரைவிலக்கணம் எதையும் கணித்தபடி தற்போதைய சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை.முன்னரெல்லாம் அகிலன்,கல்கி தொடங்கிசாண்டில்யன்,கோவி மணிசேகரன் என விரிந்து அசோகமித்திரன்,மௌனி எனப் பரந்து தளம் விரிந்தே செல்கிறது.இன்று பலர் சிறுகதைக்குள் வந்துவிட்டனர்.கல்வி,கணினியியல் வசதி என வாய்ப்புக்கள் கைக்குள் வர வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கையிலும் அப்படியே. சிறுகதைகளின் முன்னோடிகளின் தொடர்ச்சியாக பலர் வந்துவிட்டனர். அன்று தொடங்கி இன்று வரை பலரும் தம்மை சிறுகதைகளின் மூலம் அடையாளப்படுத்தி நிற்கின்றனர். சிறுகதைகள் தனியாகவும், நூலாகவும் பரிசில்களைப் பெற்றுவிடுகின்ற அளவுக்கு வளர்ந்து வருகின்றன என்றே சொல்லலாம். இன மோதல்களில் சிதறுண்ட மக்கள் பல நாடுகளில் வாழும் நிலையில் வாழ்வின் சோகம்,யுத்த நோவுகள்,குடும்ப சிதைவுகள்,ஒன்றினைவுகள் எல்லாம் இன்னும் கைகளுக்குள் வராத சூழலில் பலர் எழுத்தை தம் வடிகாலாக்கினர். பழையவர்களுடன் புதியவர்களும் இணைந்துகொண்டனர். இதற்கு புலம்பெயர் சூழலில் வானொலிகளின், தொலைக்காட்சிகளின், அச்சு ஊடகங்களின் வருகை பலரையும் உள்வாங்கும் களமாகவும் ஆகிவிட்ட நிலையில் சிறுகதைகள் எழுதும் பலரையும் உருவாக்கிவிட்டிருந்தது. இலகுவாக வாசிக்கும் சூழலும், இங்குள்ள கல்வி,நண்பர்களின் தொடர்பு கதை வடித்தல் அவர்களை ஓரளவு ஆசுவாசப்படுத்தவும் செய்வதை மறுக்கமுடியாது.
புதிய சிந்தனைகளை வரவேற்கும் சிறுசஞ்சிகைகளின் வருகையும் நம்பிக்கை ஊட்டுவனவாகவே அமைந்தன.கூடவே, முகநூலின்,இனையத் தளங்களின் வருகையும் பலரின் எழுத்தை சுவைக்கும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்தன. படிமுறை வளர்ச்சி,பிற இலக்கியங்களை வாசிக்கும் பன்முக ஆற்றலும் அவர்களுக்குள் மாற்றங்களையும் ஏற்படுத்தியது. புலம்பெயர் சூழலில் ஆண் படைப்பாளர்களுக்கு ஈடாக பெண் எழுத்தாளர்களும் தொடர்ச்சியாகவே எழுதி வருகின்றமையும்,சிலரின் கதைகள் நூலாகவும் வெளி வந்து தம்மை அடையாளப்படுத்தி சிறுகதை வரலாற்றில் பதிவு செய்து நிற்கின்றனர்.
வருடாந்தம் புலம்பெயர் நாடுகளில் பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்படும் பெண்கள் சந்திப்பும் பல பெண் படைப்பாளர்களை அடையாளப்படுத்தி நிற்கின்றது.
எனக்குத் தெரிந்தவரை சுமதிரூபன்,சந்தரவதனா,சந்திரா ரவீந்திரன்,பவானி ஆழ்வாப்பிள்ளை போன்றோரின் நூல்கள் வெளிவந்தும் உள்ளன.இன்னும் வந்தும் இருக்கலாம்.வரவும் உள்ளதாக தகவலும் உண்டு. பரவலாக பல பெண் எழுத்தாளர்களின் கதைகள் வாசிக்கக் கிடைத்தாலும் நூலாக வருகையில் ஒடுமொத்த விமர்சனக்களை வைக்கவும் உதவும். லண்டனிலிருந்து ஆய்வாளராகவும், தமிழாசிரியராகவும்,செய்தி வாசிப்பாளராகவும்,சிறுகதை எழுதுபவராகவும் நம்மிடையே கவனிப்புக்குள்ளாகிறார். இணையங்களில் எழுதிவரும் இவரின் தமிழரின் வரலாறு சார்ந்த ஆய்வு நூலை வெளியிடவுமுள்ளார்.அண்மையில் அவரின் சிறுகதைகள் சிலதை வாசிக்கக் கிடைத்தது.
'நீங்கள் கடிச்சிட்டுத் தாங்கோ ‘என்கிற கதை புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கதை தான்.தனியாக வாழும் ஒருவனுக்கு அவனது தாய் பெண் பார்த்து அனுப்புகிறாள்.அப் பெண் ஏஜண்ட் ஊடாக வருகையில் இத்தாலியில் தாண்ட கப்பலுடன் மூழ்கிப்போகிறாள்.பின் அனுப்பப்படும் பெண் முன்னால் வந்து நின்று ஆயிரம் கற்பனைகளை அவனுள் ஏற்படுத்த அதுவும் நனவாகிவிடுகிறது.அவள் இன்னொருவனுடன் சொல்லாமேயே சென்றுவிடுகிறான்.செல்வன் என்கிற பாத்திரம் மூலம் கதை சொல்லப்படுகிறது.அவனின் தாய்,தங்கை,எழிலி என்கிற பாத்திரங்களூடாக கதை நகர்த்தபட்டிருக்கிறது. செல்வனின் எதிர்பார்ப்பு,குடும்பத்தாருக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்கிற சராசரி மனிதனின் மன உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கிறார். ஆரவாரமில்லாத கதை நகர்வு.கதையாக சொல்லாமல் ஒரு வாழ்வியல் அனுபவத்தைச் சொல்கிற இவரின் கதை சொல்லும் பாங்கு விரும்பத்தக்கது. தமிழர்களிடையே காணப்படும், சாதகம், கிரகங்கள், பெண்பார்க்கும் படலங்கள் இன்னும் வாழ்வியல் மாற்றங்களிடையேயும் மறைந்துவிடவில்லை என்பதை இவரின் கதை சொல்லிச் செல்கிறது.
'பெண்' என்கிற கதை முகநூல் நண்பரை நம்பி மோசம் போகும் மது என்கிற பெண்ணின் சோகம் சொல்லப்படுகிறது.விரும்பித் திருமணம் செய்யும் கபிலன்,மதுவுக்கு குழந்தையும் கிடைக்கிறது.வீட்டில் குழந்தை,வீட்டுவேலை,கணவன் குடும்பம் என்றிருந்தவளுக்கு கணினி வாய்ப்புக்கிடைக்க அதன் முலம் முகநூலில் அரட்டை அடிக்கும் பழக்கத்தில் அறிமுகமாகும் கரனின் நட்பு அவளின் வாழ்வை திசை திருப்பிவிடுகிறது.பின் கரனிடமிருந்து கிடைத்த ஏமாற்றம் கபிலனை,அவன் மூலம் கிடைத்த மகிழ்ச்சி,குழந்தை மனதில் வந்து போக அவனிடம் வந்து சேர்கிறதான கதை நமது அன்றாட வாழ்வில் வந்து போகிற பாத்திரங்கள் தான்.கதை லாவகமாக நகர்த்தப்பட்டிருக்கிறது.அதிக வர்ணனைகள் அற்ற கதை சொல்லும் பாங்கு சில சமயம் சுவாரஸ்யம் குன்றிவிடவும் வாய்ப்புண்டு. பாத்திரங்கள் இன்னும் ஆழமாக உருவாக்கப்பட்டிருகலாமோ என நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு கதைகளிலும் புலம்பெயர் வாழ்வின் கதைகள்,சோகங்கள்,நோவுகள் சொல்லப்படுகின்றன.அனுபவம் என்பது இருவகை..தன் அனுபவம்.இன்னொன்று பிறரது ஞாபகம்.கதாசிரியருக்கும் இவ்வனுபவம் நிறையவே இருக்கிறதாக கதை மூலம் உணரப்படுகிறது. ஏஜண்டு மூலம் அனுப்படுகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் படுகின்ற அவலங்கள் யாவரும் அனுபவித்தே வந்துள்ளனர்.இன்னும் அவுஸ்திரேலியா,இத்தாலியக் கடலுள் மூழ்கி போகிற உயிர்கள்தான் எத்தனை...அவன் அல்லது அவள் வருவதை எதிர்பார்த்து வலிக்கின்ற மனதுகள் தான் எத்தனை?எத்தனை??
'நினைவு சுடும்' கதை கூட அவலத்தின் இன்னொரு கதைதான். காந்தன் சுசிலா எனும் இர்ண்டு பாத்திரங்களூடாக இன்றைய சமகால அவலத்தைச் சொல்லுகிறார்.ஏஜன்ட் மூலம் மனைவியையும் குழந்தையையும் ஏஜன்ட் முளம் எடுக்கப்போய் இன்னொருவரின் மனைவியாக வருகின்ற பெண் படும் காயங்கள் அழகாகச் சொல்லப்படுகிற கதைYஎ நினைவு சுடும்.ரஸ்யாவிலிருந்து களவாக எல்லையைக் கடக்கின்ற போது சூழல் பிரிக்கபடுகின்ற போது உறவுகளும் பிரிந்து போக காலம் முழுதும் வலியுடன் வாழ்கிற கொடுமை சொல்லப்படுகிறது.இப்படி எத்தனை மனிதர்கள் எல்லையைக் கடக்கின்றனர்.எத்தனை பேர் குடும்பங்களுடன் இணைகிறார்கள்.குடும்ப உறவுச் சிக்கல் எப்படு மாறுபாடடைகிறது.சமூகம் ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ காலம் நமக்கு சொல்லிவைக்கிற பாடம் அனேகம். கதை நேரடியாகவே சொல்கிறது.ஆலாபனைகள் அதிகம் இல்லை. பாத்திரங்களின் உரையாடல்கள் இன்னும் ஆழமாகப் பேசப்பபட்டிருக்கலாம். ஆபத்தானது என்று தெரிந்தே நிகழ்வுகள் எல்லாம் நடந்து கொண்டிருப்பது யதார்த்தமானது.இது தான் விதி என்கிறது அனைவர்க்கும் பொருந்தும்.தமிழர்க்கே மட்டும் உரித்தானது அல்ல. இப்போது தான் சிறுகதைகளில் கை வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.ஆனாலும் சொல்ல வந்ததை சொல்கிறார். உலகில் அவலங்களின் கதை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. முகநூல் நண்பனாகி அவனை மனதுள் விருப்பத்திற்குரியவனாக்கி அவனின் அண்மை தேவைப்பட,அவளுக்கு பல்கலைக்கழகம் சுதந்திர உணர்வுகள் சிறகசைக்க,கை கொடுக்க, ஒரு சந்திப்பின் போது அவனின் சுயரூபம் தெரியவர அவனின் நட்பைத் துண்டிக்க எண்ணியவளுக்கு சிரமங்கள் ஏற்பட இறுதியில் காவல் நிலையம் புறப்படுவதாக'எத்தனை மரங்கள் தாவும்' கதை சொல்கிறது. பெண்ணுக்கு மாத்திரமல்ல,ஆணுக்கும் ஏற்படுகின்ற ஏமாற்றம் பற்றியும் கதைகள் சொல்லுகின்றன. குறைவாவே எழுதும் நிவேதா தொடர்ச்சியான எழுத்து பயிற்சியைக் கொடுக்கலாம். இன்னும் வீச்சான கதைகளை எதிர்காலத்தில் எதிர்பார்த்து இலக்கிய உலகம் காத்திருக்கிறது. சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து நூலாக வருகையில் புதிய பரிமானத்தைப் பெறலாம். வாழ்த்துக்களுடன்,
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems