எழுத்தாளர் தி.ஜானகிராமனைப்பற்றி பலர் பேசும்போதெல்லாம் ஓர் உறுத்தல் எனக்குள்ளே எழும். இன்னும் அவருடைய படைப்பைப் படிக்காமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு வருத்தும். சென்ற ஆண்டு புத்தகவிழாவில் அவருடைய ஒரு நாவலைப்படித்து விடவேண்டும் என்று எண்ணி வாங்கினேன். வீட்டு நூலகத்தில் உள்ளது. அதற்குள் இங்கு வந்துவிட்டதால் அதையும் தொடமுடியவில்லை. இரண்டு வாரத்திற்கு முன்பு சுவாசுகாங் நூலகத்தில் தி. ஜனகிராமனின் ‘மனிதாபிமானம்’ என்ற சிறுகதைத்தொகுப்பை எடுத்தேன். மூன்றுவாரத்தில் முடித்துவிடவேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன். இன்றுதான் முடித்தேன்(13.12.13) பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. அவருடைய மோகமுள், மரப்பசு பற்றி நண்பர்கள் சிலாகித்துப் பேசியது நினைவுக்கு வருகிறது. ஜானகிராமன் என்னை எப்படிக் கவர்கிறார் என்று பார்க்கத்தான் இந்தத்தொகுப்பையே எடுத்தேன். தி.ஜானகிராமன் மனச்சாட்சியோடு எழுதுகிறவர் என்பது தெளிவானது. அவருடைய நடை அப்படியே பேச்சுவழக்கில் அமைந்த நடை. பிராமணர் என்பது எழுத்தின் மொழியில் இருந்தாலும் எழுதும் இதயத்தில் இல்லை என்பது என் முடிவு. இது தற்காலிகமானதா? நிரந்தரமானதா? தொடர் வாசிப்பு பதிலளிக்கலாம்.
(2) “மனநாக்கு” என்ற கதையின் தலைப்பு என்னைக்கவர்ந்தது. ஒரு கவிதையின் தலைப்பாக வைக்கலாமே எனத்தோன்றியது.
“பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்ல ஆயிடுத்து என் புத்தி”
“ தரையிலே கிடந்தவன் பாயில் ஏறினான் என்பார்களே”
“ என் மனைவி அடிக்கடி என் மனசை சென்னை எருமையைத்திருப்புவதுபோல் வழிக்குத்திருப்பிக்கொண்டிருந்தாள்”.
அடுத்து மிக முக்கியம்..
“கேலி என்ன கேலி! எந்தக்கிழவனுக்கு சபலம் இல்லைங்கிறேள்? முடியலை.வேஷம் போடறான்கள். நான் அப்படியில்லை’
“ நான் விளையாடலெ. தற்செயல் . தற்செயலைப்போல் அதிசயமும் கிடையாது, அழகும் கிடையாது”
“சில கிர்ணிப்பழங்களுக்கு வரிகள் இருப்பதுபோல் முகத்திலும் விபூதிப்பட்டை”
இவையெல்லாம் என் மனசில் பதிந்த தி. ஜானகிராமனின் சொற்றொடர்கள். தொகுப்பில் ஒரு கதையைப்பற்றி விரிவாக எழுதவேண்டும் என்பது என் ஆசை. அந்தக்கதையின் தலைப்பு “ சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்”. இந்தக்கதையை முடிக்கும்போது ‘அப்பனுக்குப்புத்திசொன்ன சுப்பையா’ என்ற பாடல்வரியும் நினைவுக்கு வந்தது..“நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே” இது தந்தை முத்துவின் வாய்மொழி. “நம் பிள்ளையைப்பார்த்து நாற்பது ரூபா சம்பளம் போட்டு சாப்பாடும் போடத்தோன்றிட்டே ஒருவனுக்கு! பணத்தையே தின்று பணத்தையே உடுத்தி , பணத்திலேயே படுத்துப்புரளுகிற கொழுப்பு ஜன்மங்களாய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக்கொடுத்து நாற்பது (3) ரூபாய் கொடுக்கவாவது” இது அம்மா மீனாட்சியின் மனமொழி. இப்படிப்பெற்றோருக்குப்பிடிக்காத , உதவாத குழந்தையாகக் கருதப்பட்டவன் அக்கணாக்குட்டி. பெயர் சாம்பமூர்த்தி. அக்கணாக்குட்டி மூக்கும் முழியுமாக இல்லாதவன். மூக்கில் வற்றாத ஜலதோஷம். நிமஷத்துக்கு ஒரு உறிஞசல். படிப்பு வரல. மளிகைக்கடையில் விட்டுப்பார்த்தார்கள். சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் விட்டார்கள். எங்கேயும் அக்கணாக்குட்டி சரியாக இல்லை. எதற்கும் ஏற்ற குழந்தையில்லை அக்கணாக்குட்டி என்பது அவர்களது முடிவு. இதைக்கேள்விப்பட செட்டியார்வாள் மெட்ராசுக்கு அனுப்பிவைச்சாரு. ஒரு பெரிய மனிஷன் வீட்டுல கூடாட ஒத்தாசையா இருக்கணுமாம். புள்ளிங்கள் பள்ளிகுடத்துக்குப்போகும். கொண்டு விடனும். கடை கண்ணிக்குப்போகனும். சில்லரை வேலைதான். நல்ல கவின்ச்சுவாங்க. வீட்டோடு சாப்பாடு என்ற விவரத்தை முத்துவிடம் சொல்ல காத்துக்கிடந்த முத்துவும் அவருடைய மனைவியும் ஒத்துக்கிட்டாங்க. மெட்ராசுக்குப்போயி அக்கணாக்குட்டி முதல் மாதச்சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டான். பெற்றோருக்கு அதிர்ச்சிஅலந்த அதிசயம். அக்கணாக்குட்டி பணம் அனுப்பியதில் அவர்களுக்கு வியப்பு. வீட்டில் ஒரு கலகலப்பும் குதூகலமும் ஏற்படுகிறது. காவேரியில் குளிக்கப்போன முத்து “ சில்லரை ஏதாவது கொடேன். கிரைத்தண்டு..பாகற்காயின்னு ஏதாவது வாங்கிண்டு வர்றேன். இன்னிக்குக்கூடவா வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும்?” என்று கேட்டார் முத்து. ஜானகிராமன் மொழியில் சொன்னால் ..” பணம் வந்தால் இந்த நிமிண்டல்,குழையல் இரண்டுபேருக்கும் சகஜம்.” தொடர்ந்து பணம் வந்துசேர்வதில் தாமதம் ஏற்பட்டது. (4) பெற்றோருக்கு ஒரு பயமும் வந்துவிட்டது . அக்கணாக்குட்டி சம்பாதிச்சு நான் சாப்பிடனுங்கிறதில்லை என்றெல்லாம் முத்து சொல்ல தொடங்கிவிட்டார். இந்த நேரத்தில் ஹைகோர்ட் வக்கில் அண்ணாவைய்யர் மெட்ராசுக்கு அழைத்தார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாத்தால் அவருக்கு சமைச்சுப்போட. “பால்லெ பழம் விழுந்தாப்ல ஆயிடுத்து” சென்னை வந்ததும் அக்கணாக்குட்டியைப் பார்க்க வேண்டியதை வக்கீலிடம் தெரிவிக்கிறார் முத்து. “அக்கணாக்குட்டியை பார்த்துவிட்டு உடனே வந்துவிடு. இரவே போகும்படியா இருக்கும் “ என்றார். எவர் சில்வர் டப்பாவில் சர்க்கரைப்பொங்கலைப்போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்சில் ஏறினார் முத்து. அக்கணாக்குட்டி இருக்கும் வீட்டை அடைந்து , அதைப்பார்த்து பெருமூச்சு விடுகிறார். அரண்மனைபோன்ற வீடு. அவ்வளவு வசதியான வீடு. அங்கேதான் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். முகத்தில் கறுப்புக்கண்ணாடி. ஒரு பையன் அவர் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத்தலையை வரக்கு வரக்கு என்று சொறிந்துகொண்டிருந்தான்.
“யப்பா “என்று அக்கணாக்குட்டியின் குரல்.
விளக்கின் கறுப்பு மறைவிற்குப்பின்னால் இருந்த அக்கணாக்குட்டி “ எப்பப்பா வந்தே? என்று மூக்கை உறிஞ்சிகொண்டே சிரிக்கிறான். பெரியவர் விசாரிக்கிறாரு. பெரியவர் தோற்றம் அக்கணாக்குட்டியின் அப்பா முத்துவுக்கு பயம்,அதிர்ச்சி, கவலை அனைத்தையும் தந்தது. முத்துவுக்குப் பேச வாய்வரவில்லை. முத்துவுக்கு மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது.
“ உங்க மாதிரி யார் இருப்பார்? விளக்கேத்திவெச்சேளே என் குடும்பத்துக்கு.! நிஜமாச்சொல்றேன் (5) அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலேதான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மதிரி? இந்தக்காலத்துல!” இதுவெல்லாம் அக்கணாக்குட்டியின் எஜமானரைப்பார்த்து சொல்ல நினைத்த வார்த்தைகள். இப்போது..
“மனதில் பீதி, குமைச்சல், குமட்டல், கோபம். பாவி நீ நல்லாயிருப்பியா?” என்றி அடிவயிற்றிலிருந்து கதறவேண்டும்போலிருந்தது முத்துவுக்கு. ஆனால் அக்கணாக்குட்டி அப்பாவைப்பார்த்து புன்சிரிப்பு சிரித்தான். பெரியவரிடம் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மகனை அழைத்துப்போகவந்தேன் என்றார். பெரியவரும் “சாம்பு அப்பாவோட போறியா?” என்று கேட்டார்.
“பையன் ரொம்ப ஒத்தாசையா இருந்தான்.சுருக்கமா கொண்டுவந்து விடுங்கோ” என்றார்.
வேண்டா வெறுப்பாக பெரியவர் கொடுத்த காபியை கண்ணைமூடி மளமளவென்று விழுங்கினார்.கையும் பையுமாக வந்த சாம்பமூர்த்தி என்கிற அக்கணாக்குட்டி மாறியிருந்தான். தலையை வழவழவென்று சீவிவிட்டிருந்தான். வெள்ளைச்சட்டை,வெள்ளைவேட்டி,முகத்தில் ஊட்டத்தின் பொலிவு . அக்கணா விழுந்து வணங்கி எழுந்து “போயிட்றேன் மாமா ” என்றான். “போயிட்டுவா.லெட்டர் போடு. எப்ப வர்றேன்னு எழுது” என்றார் பெரியவர்.
இருவரும் விடைபெற்றுக்கொண்டுஅவசர அவசரமாக பஸ் ஏறினதும் முத்துக்கு பொறுக்கமுடியாம கொட்டினார்.
“ ஏண்டா மக்கு. இந்தமாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு ஏன் சொல்லலை? ரொம்ப கரிசனமா தலையை சொறிஞ்சுவிட்டியே. புத்திதான் இல்லை.கண்ணுகூடவா இல்லை?
(6) ‘அது ஒட்டிக்காதப்பா’ என்றான் அக்கணாக்குட்டி.
‘யார் சொன்னது?’ முத்து.
‘அவ்வாத்து மாமி-மாமா,மோகன் எல்லாரும் சொல்லுவாளே. அவாளுக்கு நேரமே கிடையாது.’ அக்கணா.
“உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும். அசட்டு பொணமே’ முத்து.
“ ஒண்ணுமில்லே. இத பாரு. ஒரு வெள்ளைக்காரப்பெண் யாரோ ஒரு ஆணின் கையைப்பிடித்துத் தடவிக்கொண்டு நிற்கிறாள். கருப்புக்கண்ணாடிக்காரருக்கு இருந்த மாதிரியே கை,மூக்கு எல்லாம். இது யாரு தெரியுமா? வெள்ளைக்கார தேசத்துல ராணி. போனமாசம் ராஜாவோட வந்து எதையும் பாக்காம மாமா மதிரி அங்கே முப்பது நாற்பது பேரு இருக்காலாம். எல்லாரையும் பார்த்து கையெல்லாம் தடிவிக்கொடுத்திருக்காங்க. ஒட்டிக்கும்னா தடவிக்கொடுப்பாங்களா?பேத்தியம் மாதிரி பேசுறியே!”
“பேத்தியம் மாதிரியா? நானா பத்தியம்? அந்தப்படத்தைப்பார்க்க ஆரம்பித்தார் முத்து.
கதை இத்துடன் முடிகிறது.
கதைநெடுக எங்கேயும் என்ன நோய் என்று குறிப்பிடவில்லை.ஆகவே நானும் குறிப்பிடவில்லை. ஒட்டிக்காது என்பதைத்தெரிந்துகொண்ட அக்கணாக்குடி தைரியமாக பெரியவரைத்தொட்டு சொறிஞ்சு விடுகிறான். வெள்ளைக்கார ராஜா ராணிக்கு இருக்கும் உள்ளம்தானே அக்கணாக்குட்டிக்கும் இருக்கிறது. அவர்களுடய நல்ல உள்ளம் விளம்பரத்திற்கு உதவுகிறது. இவனுடைய நல்ல உள்ள நாற்பது ரூபாய் சம்பாதிக்கிறது. பெத்தமனம் தவிப்பதை உணர்கிறோம். எழுதவே கைகூசும்போது பெத்தவன் நேரா பார்த்தா எப்படி அவன் மனம் துடிச்சிருக்கும். அப்பாவையே பைத்தியம் என்கிறான் அப்பாவி அக்கணாக்குட்டி. (7)உயர்ந்த தொண்டைச்செய்ய தெய்வ உள்ளத்தை பெற்றிருக்கிறான் அக்கணாக்குட்டி.. ஒண்ணுக்கும் உதவாதவன் எனக்கருதப்பட்ட அக்கணாக்குட்டி ஓர் அரிய பணியைச்செய்ய படைக்கப்பட்டவன் என்பது புலனாகிறது. எவ்வளவு பணமிருந்தாலும் பெரியவரைக் கவனிக்க அந்த வீட்டில் யாரும் இல்லை. பணம் இருக்கிறது. மனமில்லையே! பெற்றவர்களுக்கு இருக்கவேண்டிய சகிப்புத்தனமை பிள்ளையிடம் இருக்கும் அதிசயம் கதையில் வெளிப்படுகிறது. அறிவுரை கூற தகுதி வயதா? மனமா? எனக் கேட்கத்தோன்றுகிறது. தொண்டு செய்யவும் தகுதியிருந்தால்தான் தொண்டுக்கே பெருமை. மருத்துவருக்கே, செவிலித்தாய்க்கே இருக்க வேண்டிய அந்த உள்ளம் அக்கணாகுட்டிக்கு இருப்பது எதைக்காட்டுகிறது? என்ன இருந்தாலும் யாருக்குத்தான் மனம் வரும்?அக்கணாக்குட்டி விதிவிலக்கா? விதியின் விளக்க?இப்படி அலைபோல் எண்ணங்கள் எழவைத்த கதையிது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems