[அண்மையில் பதிவுகள் இணைய இதழில் வெளியான 'பிரமிளின் தவளைக் கவிதை பற்றியதொரு புரிதல்' என்னும் எனது கட்டுரையில் 'தவளைக் கவிதை’ பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அது பற்றிய ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்துள்ள பதிற் கடிதம் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. - வ.ந.கி -] ஒரு கவிதையை வாசிக்க குறைந்தபட்ச வாசிப்பு அதிகபட்ச வாசிப்பு என இரு தளங்களை உருவாக்கிக்கொள்வது பயனளிக்கும் என்பது என் எண்ணம். குறைந்தபட்ச வாசிப்பு என்பது அந்தக்கவிதை உருவான மொழி-பண்பாட்டுச்சூழலில் கவிதையின் வரிகள் மூலம் பொதுவாக அடையச்சாத்தியமான அர்த்தம். அந்த மொழி-பண்பாட்டுச்சூழலில் உள்ள, கவிதையின் தனிமொழியை கற்பனைமூலம் விரித்து அறியும் பயிற்சி கொண்ட எல்லா கவிதைவாசகர்களும் ஏறத்தாழ அடையக்கூடிய வாசிப்பு அது. ஒரு வகுப்பில், ஒரு விவாதக்கூடத்தில், ஓர் வாசிப்பரங்கில் எப்போதும் அந்த குறைந்தபட்ச வாசிப்பைத்தான் முதலில் முன்வைக்க முடியும். இந்த வரிகள் இவ்வாறெல்லாம் பொருள் அளிக்கின்றன, ஒட்டுமொத்தமாக இக்கவிதை இந்தப் பொருளை, இந்த உணர்வை, இந்த தரிசனத்தை அளிக்கிறது என்று சொல்லலாம். அப்படிச் சொன்னதுமே அதை அங்குள்ள ஒவ்வொருவரும் தாண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வாசிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்தான் அதிகபட்ச வாசிப்பு என்கிறேன்.
அப்படி அந்தரங்க வாசிப்பு நிகழ்கையில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தனித்த அர்த்தங்களை அளிப்பதைக் காணமுடியும்.கவிதை வெவ்வேறு தனிப்பட்ட உணர்ச்சிகளுடனும் தனிப்பட்ட அனுபவங்களுடனும் தொடர்பு கொண்டு விரிவதை உணரமுடியும். வெவ்வேறு கவிதைகளுடன் அக்கவிதையை ஒவ்வொருவரும் இணைத்துக்கொள்வதை காணமுடியும்.
இவ்வாறு அனைவரும் தங்கள் வாசிப்பைச் சொல்லிமுடிக்கையில் அத்தனை வாசிப்பும் சேர்ந்து அந்தக் கவிதையை முன்னகர்த்தி இன்னொரு பொதுஅர்த்தம் நோக்கிக் கொண்டுசென்றிருப்பதைக் காண்போம். அதன்பின் மறுநாள் அதேகவிதையை விவாதிக்க அமர்ந்தால் அந்த முதல்கட்ட குறைநதபட்ச வாசிப்பு முந்தைய நாள் நிகழ்ந்த அதிகபட்ச வாசிப்பின் ஒட்டுமொத்தமாகவே இருக்கும்
இவ்வாறுதான் கவிதைகள் சமூகத்தால் வாசித்து உள்வாங்கப்படுகின்றன. ஒரு கவிதை வெளியான உடனே அதன் வாசிப்பு நிகழ்வதற்கும் சிலவருடங்கள் கழித்து அதன் வாசிப்பு நிகழ்வதற்கும் நடுவே பெரும் வேறுபாடு உள்ளது. ஆரம்பத்தில் முற்றிலும் புரியாதவையாக கருதப்பட்ட பல கவிதைகள் ஒரு தலைமுறைக்காலம் தாண்டியதும் மிக எளிய கவிதைகளாக ஆகிவிடுகின்றன.
இப்படிச் சொல்கிறேன். கற்சுறாவின் வாசிப்பு என்பது அவரது அந்தரங்கமான அதிகப்ட்ச வாசிப்பு. அப்படி வாசிக்கக்கூடாதென்றில்லை. கவிதையில் உள்ள சொற்கள் சொல்லப்படுபவை அல்ல, ‘வந்துவிழுபவை’. அவை ஏன் வந்து விழுந்தன என்று நாம் யோசிப்பது கவிதை வாசிப்பின் ஒரு முக்கியமான கூறுதான்.
உங்கள் வாசிப்பு இன்னொரு அதிகபட்ச வாசிப்பு. உங்களைப்போல இன்னும் பத்துபேர் அமர்ந்திருக்கும் சபையில் இன்னும் பத்துவாசிப்புகள் வெளிவரும். கவிதை அந்த பத்துகோணங்களின் சமரசப்புள்ளியில் தன் அர்த்ததை நிகழ்த்திக்கொண்டிருக்கும். சென்ற இருபதாண்டுக்காலத்தில் முப்பத்திரண்டு கவிதையரங்குகளை நிகழ்த்தியிருக்கிறோம். தமிழிலும் மலையாளத்திலும் உள்ள மிகச்சிறந்த கவிஞர்கள் அமர்ந்து அவர்களின் கவிதைகளை விவாதித்திருக்கிறார்கள். இந்த ‘அர்த்தம்திரளல்’ நிகழ்துவருவதை கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.
ஆகவே கடைசி அர்த்தம் என ஒன்றில்லை. கவிதை என்பது ஓர் ஆழ்மன எழுச்சி மொழியைச் சந்திக்கும் ஒரு கணம் மட்டுமே. அர்த்தம் மூலம் அது தன்னை நிகழ்த்துவதில்லை, வாசகர்களில் உருவாக்கும் ஆழ்மன எழுச்சி மூலமே நிகழத்துகிறது.
கடைசியாக, இருபதாண்டுகளுக்கு முன் இக்கவிதைபற்றி பிரமிளிடம் பேச நேர்ந்திருக்கிறது. பிரமிள் அன்று தமிழில் ஒலிக்கக்கேட்ட அரைவேக்காட்டு கோட்பாட்டுக்கூச்சல்களைக் கண்டு எரிச்சலுற்று இதை எழுதினதாகச் சொன்னார். நூறும் ஆயிரமும் அறிந்தவன் அசட்டுத்தனமாக ஒன்றில் நிற்கையில் உள்ளுணர்வெனும் ஒன்றை மட்டும் அறிந்தவன் முன்செல்வதைச் சொல்லியிருக்கிறேன் என்றான்
நான் சொன்னேன், இக்கவிதையில் ‘தவளைக் கவிதை’ என்ற சொல்லாட்சி எனக்கு அதிகமாகப் படுகிறது. கவிதையை நீங்கள் இப்படி அர்த்தம்கொள்ளவேண்டும் என்று சொல்வதுபோல் உள்ளது. வெறுமே ’தவளை’ என்று மட்டும் சொன்னாலே போதுமே -என்று
வழக்கம்போல பிரமிள் கடும் சினம் கொண்டு கத்த ஆரம்பித்தார். ‘நீ என்ன பெரிய புடுங்கியா?’ என்ற தரத்தில்.
வழக்கம்போல நான் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் பெசாமல் நின்றேன்.
அதன் பின் அவரே ‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்றார்
‘புத்தரே’ என்ற சொல் உங்களை மீறி விழுந்தது. எனக்கு அது கவிதையை மீறிய அர்த்ததை அளிக்கிறது. நான் ஆயிரம்காலடிச்சுவடுகள் என்ற ஒரு நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆயுரம் புத்தர்களை காட்டமுயலும் நாவல். [எழுதிமுடிக்காமல் கையில் இருக்கிறது] அதனுடன் இந்தக்கவிதை ஒத்துப்போகிறது- என்றேன்
என்னிடம் அதை விளக்குமாறு பிரமிள் சொன்னார். நான் சொன்னேன், ஆறு வேகமிழக்கும்போது கிளைகளாகப்பிரிவதுபோல புத்தர் புத்தரல்லாமலாகும்போதுதான் நூறாகவும் ஆயிரமாகவும் பிரிகிறார்.தத்துவ புத்தர், ஆசார புத்தர், வழிபாட்டு புத்தர். அத்தனை புத்தர்களும் பிடிக்குச்சிக்குபவர்கள். ஒற்றைப்புத்தர் நழுவிச்சென்றுகொண்டே இருப்பார்.நடையா, தாவலா, பறத்தலா என்று சொல்லமுடியாதபடி- என்று
பிரமிள் ‘அது ஒரு நல்ல வாசிப்பு’ என்றபின் ‘தவளைக் கவிதை என்று சொன்னதலாமட்டும் அப்படி வாசிக்கமுடியாமல் ஆகிறதா என்ன?’ என்றார்.
நான் ‘அது தடையாக இருக்கிறது’ என்றேன்.
பிரமிள் ‘எந்தக் கவிதையிலும் கவிதைவாசகன் சில சொற்களை தன்னையறியாமலேயே நீக்கம்செய்துகொண்டுதான் வாசிக்கிறான்’ என்றார். ‘கவிதையை நல்ல வாசகன் திரும்பச்சொல்லும்போது நுட்பமான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கும்…சொற்கள் இடம் மாறியிருக்கும். வேறு சொல் வந்து சேர்ந்திருக்கும். கண்டிப்பாக சில சொற்கள் இல்லாமலாகியிருக்கும்’
அதற்கு உடனே ஒரு உவமை சொன்னார். அதுதான் பிரமிள். ஹென்றி ஷாரியரின் பாப்பில்யான் நாவலில் அலுமினியக்குழாய்களில் பணம் வைத்து மலக்குடலுக்குள் செருகுவார்கள். இரண்டு மூன்று குழாய்கள். ஆனால் வெளியே எடுக்கும்போது எப்போதும் உள்ளே போன வரிசைமுறை மாறியிருக்கும். அதைப்போலத்தான். உள்ளே சென்ற கவிதை அங்கே அவனுக்குள் கிடந்து புரள்கிறது, மாறுகிறது.
நான் கேட்டேன் ‘வாசகன் கவிதையில் சொற்களைச் சேர்ப்பதுண்டா?’ .
‘சேர்த்தால் அவனைச் செருப்பாலடிக்கவேண்டும்’ என்றார் பிரமிள்
ஜெ
http://www.jeyamohan.in/?p=37243
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems