கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர். சென்னை பாரதீய வித்தியா பவனில் 29.1.2013 அன்று செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழாவின் சிறப்பம்சமாக இவ்வரவேற்புபசாரம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றான பலனை எதிர்பார்க்காமல் சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துச் சேவை செய்ய வேண்டும் என்ற வாக்கைத் தன் வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி வரும் செல்வராஜாவுக்கு இந்நிகழ்வு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். நிகழ்ச்சிக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும். பாரதீய வித்தியா பவன் வாயிலில் நூலகவியலாளரின் புகைப்படத்தைத் தாங்கிய பாரிய வண்ணப் பதாதையொன்று “இலண்டன் மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் வரவேற்பு விழாவுக்கு வருகைதரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்று வரவேற்றது.
நிகழ்வில் தமிழகத்தின் பிரபல அறிவியல் நிறுவனங்களின் முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள், தலைவர்கள், பேராசிரியர்கள், தமிழகத்தின் மூத்த நூலகர்கள், சென்னை எழுத்தாளர்கள்; சங்கத் தலைவர் உள்ளிட்ட அங்கத்தினர்கள் என பலரும் வருகை தந்திருந்தார்கள். பிரபல சட்டத்தரணி விஜயகுமார், விருபா டொட் கொம் குமரேசன், சென்னை வள்ளியம்மாள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியை பானுமதி, எழுத்தாளர் சுகுமாரன், இதயகீதம் ராமானுஜம் போன்றோர் அவர்களுள் அடங்குவர்.
மண்டபத்தினுள் நுழைந்த நூலகவியலாளரை ஈழத்தவரான திரு வரதன் அவர்கள் பொன்னாடை அணிவித்தும் மலர்ச்செண்டு வழங்கியும் வரவேற்றார். இவர் திரைப்பட இயக்குநர் குகநாதனின் சகோதரராவார். செல்விகள் வனிதா மதிவாணன், சாலினி ஆகிய இளவல்கள் அவையோரை வாயிலில் நின்று வரவேற்றனர். நூல்தேட்டம் உள்ளிட்ட நூலகவியலாளர் செல்வராஜாவின் நூல்களின் பிரதிகள் மண்டப வரவேற்பறை வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை அவையோர் பார்வையிட வசதி செய்துதரப்பட்டிருந்தது.
தமிழ்த்தாய் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாயிற்று.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தமிழ்த் தேனீ இரா. மதிவாணன் இவ்விழாவினை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தார். அவையோரை வரவேற்று அவர் திரு செல்வராஜாவுவை சிறப்பான முறையில் அறிமுகம் செய்துவைத்ததுடன் அவருக்கும் மேடையில் வீற்றிருந்த பேச்சாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை நித்தியகல்யாணி அவர்கள் முதலில் தனது வரவேற்புரையை நிகழ்த்தினார். நூல்தேட்டம் செல்வராஜாவின் பணிகள் தமிழகம் வரை பரவியுள்ளதை அவர் தமதுரையில் விதந்துரைத்தார்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவரும் ஈழத்தமிழர்களின் மிக நெருங்கிய சட்டத்துறை வல்லுநருமான (Senior Advocate) இரா. காந்தி அவர்கள் தலைமையுரையை நிகழ்த்தினார். அண்மையில் பாரதி விழாவுக்குத் தமது அணியினர் கொழும்பு சென்றதையும் தமக்கு விமானநிலையத்திலேயே ஈழத்தமிழர்களால் அளிக்கப்பட்ட சிறந்த வரவேற்பையும் நினைவுகூர்ந்த அவர் புலம்பெயர்ந்தபோதும் ஈழத்தமிழரின் வரலாற்றை எதிர்காலம் அறியும்வகையில் அவர்களது அறிவாக்கங்களை பாதுகாக்கவேண்டும் என்ற ஒரே முனைப்புடன் எவ்வித பட்டம் பதவிகளையும் எதிர்பாராது, தனது சொந்த உழைப்பிலும் நிதிவளத்திலும் கடினமான அப்பாரிய பணியை மேற்கொள்ளும் ஒரு ஈழத்தமிழனை வரவேற்று வாழ்த்துவது பெருமைதருகிறது என்றார். தனது உரையின் முடிவில் நூலகவியலாளருக்குப் பொன்னாடை அணிவித்தும், மலர் மாலை அணிவித்தும் சிறப்புச் செய்ததுடன் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் வெளியீடுகளை அன்பளிப்பாக வழங்கினார்.
அடுத்து முன்னிலை உரையாற்றியவர் மருத்துவர் மேஜர் து.இராஜா அவர்கள். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான இவர் தனது உரையில் திரு செல்வராஜாவை வரவேற்று உரையாற்றியதுடன் சுவாமி விவேகானந்தரின் பணிகளை விரிவாகப் போற்றினார்.
மேஜர் து.இராஜாவின் உரையை அடுத்து இன எழுச்சிக் கவிஞரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தின் துணைச்செயலாளருமான நெல்லை இராமச்சந்திரன் அவர்கள் நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் சந்தக் கவிதையில் ஒரு வாழ்த்துப்பாவை அரங்கில் பாடி, அதன் கட்டமிடப்பட்ட பத்திரப்பிரதியை அவரிடம் கையளித்தார்.
அவரைத் தொடர்ந்து விவேகானந்தர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், விஞ்ஞான ஆய்வு நிறுவனமொன்றின்
தற்போதைய இயக்குநருமான வ.வே சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அவர் நூலகவியலாளர் செல்வராஜாவின் பணிகளை விதந்துரைத்தபின்னர், சுவாமி விவேகானந்தர் பற்றிய தனது பேருரையை நிகழ்த்தினார். நிகழ்வின் இறுதியில் அவரும் திரு செல்வராஜாவுக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.
அதன் பின்னர் தலைவர் அவர்கள் அவையோரை, நூலகவியலாளருக்கு வாழ்த்துத் தெரிவிக்க மேடைக்கு அழைத்தார். நூலக அறிஞர் பேராசிரியர் பெருமாள், சென்னை நூலகச் சங்கத் தலைவர் எம்.முத்துசாமி, வள்ளியம்மாள் கல்வி நிதியத் தலைவர் கலாநிதி சா வளவன், தமிழக எழுத்தாளர் சங்கச் செயலாளர் வாசுகி கண்ணப்பன் உள்ளிட்ட பலரும் பொன்னாடைகளால் போர்த்தி ஈழத்துத் தமிழ் நூலகவியலாளர் செல்வராஜாவுக்கு உளமார வாழ்த்துத் தெரிவித்தனர்.
தமிழகத்தின் வாழ்த்துக்களால் திக்குமுக்காடிய செல்வராஜா அடுத்து தனது ஏற்புரையை நிகழ்த்தினார். ஈழத்தமிழரின் வரலாறு ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வந்திருப்பதை வரலாற்றுரீதியில் எடுத்துக்கூறிய அவர். யாழ்ப்பாண நூலக எரிப்புடன் அண்மைக்காலத்தில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தின்போதும் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அருங்காட்சிப்பிரிவில் பாதுகாக்கப்பட்ட ஆனைக்கோட்டை முதுமக்கள் தாழி அழிக்கப்பட்டதை உதாரணப்படுத்தி விளக்கினார். எதிர்கால சந்ததியினர் எமது வரலாற்றை சரியாக எழுதவேண்டுமானால் அவர்களுக்குத் தேவையான அறிவியல் மூலாதாரங்கள் பேணப்படவேண்டும். இன்று எந்தவொரு அரசோ, அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டியங்கும் எந்தவொரு அறிவுசார் நிறுவனமோ இப்பணியை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாது. அதனால் தான் தன்னை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்தி தனிமனித நிறுவனமாக மாறி இயங்குவதாகக் குறிப்பிட்டார். தனக்கு தார்மீக ஆதரவினை வெளிப்படையாக வழங்குவதன்மூலம் இப்பணியை தடையின்றி முன்னெடுக்க முடியும் என்றார்.
நிகழ்வின் இறுதியில் தான் இலங்கையிலிருந்து கொண்டுசென்ற நூல்தேட்டம் தொகுதிகளின் முழுமையான தொகுப்புக்கள் அடங்கிய பொதியை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தின் தலைவர் இரா காந்தி அவர்களிடம் கையளித்து தமிழகத்தின் பொருத்தமான நூலகமொன்றில் அதனை பாதுகாக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நிகழ்வின் இறுதியில் முனைவர் எம். நித்தியகல்யாணி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். ஈழத்தமிழரின் வலியையும் மன வலிமையையும் செல்வராஜாவின் உருவில் தான் தரிசிப்பதாக அவர் நெகிழ்ந்து குறிப்பிட்டார். நிகழ்வு இந்திய தேசிய கீதத்துடன் மங்களகரமாக நிறைவெய்தியது. ஈழத்துத் தமிழர் ஒருவருக்கு தமிழகத்தில் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வு ஈழத்தமிழர் பெருமைகொள்ள வேண்டியதொன்றாகும்.
தனியொருவனாக நின்று பாரிய சுமையைத் தாங்கி இயங்கும் இத்தமிழ்மகனின் தோள்களை வலுப்படுத்தும் பணி ஒவ்வொரு ஈழத்தமிழ் அறிவுஜீவிக்கும் உரியது. அவருக்கு அத்தியாவசியமாக வேண்டிய நிதி உதவி உள்ளிட்ட தார்மீக உதவிகளை சிறிதளவேனும் வழங்கவேண்டும் என்று நம்மில் எத்தனைபேர் சிந்திக்கிறோம் என்பது கேள்விக்குரியதாகும். வழமை போலவே யாரோ ஒருவர் செய்கிறார் நாம் பார்வையாளர்களாகவே இருந்துவிட்டுப் போவாம் என்ற நிலையே எம்மிடையே காணப்படுவது வெளிப்படையாக உள்ளது. இந்நிலையை மாற்றவும் ஈழத்தமிழரிடையே ஒரு சிறு சலனத்தையாவது ஏற்படுத்தவும் இந்நிகழ்வு துணைபுரியுமாயின் அது இந்நிகழ்வினை ஒழுங்கு செய்த இரா மதிவாணனுக்கும் அவரது நண்பர்களுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.
நன்றி: http://thesamnet.co.uk/?p=44056
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems